IPL 2024: தலை காட்டிய ‘தல’! 20 ரன் வித்தியாசத்தில் சென்னை வெற்றி!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இருபத்திநான்காம் நாள்

ஐபிஎல் 2024 – 14.04.2024 

இரண்டு ஆட்டங்கள்

இன்று ஞாயிற்றுகிழமை ஆதலால் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் கொல்கொத்தாவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக  நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் மும்பையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. 

கொல்கொத்தா vs லக்னோ

லக்னோ அணியை (161/7, நிக்கோலஸ் பூரன் 45, கே.எல். ராகுல் 39, ஸ்டார்க் 3/28) கொல்கொத்தா அணி (15.4 ஓவரில் 162/2, பில் சால்ட் 89*, ஷ்ரேயாஸ் ஐயர் 38*, மொஹிஷின் கான் 2/29) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று கொல்கொத்தாவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற கொல்கொத்தா அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. லக்னோ அணியில் இன்று மூன்று மாற்றங்கள்; ஷமர் ஜோசப், தீபக் ஹூடா, மொஹிஷின் கான் ஆகியோர் நவீன் உல் ஹக், தேவதத் படிக்கல், அர்ஷத் கான் ஆகியோருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டனர். அணியின் தொடக்க வீரர் க்விண்டன் டி காக் இரண்டாவது ஓவரில் 10 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். நிக்கோலஸ் பூரன் (45 ரன்), ராகுல் (39 ரன்), ஆயுஷ் பதோனி (29 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 161 ரன் எடுத்தது.

162 ரன் என்ற எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர் சுனில் நரேன் (6 ரன்) 2ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அங்கிரிஷ் ரகுவன்ஷி (7 ரன்) நான்காவது ஓவரில் அவுட்டானார்.  மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஆடி 89 ரன் அடித்தார். அதில் 14 ஃபோர்கள் மற்றும் 3 சிக்சர்கள். அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் அவருடன் இணைந்து விளையாடி, இறுதி வரை அவரும் ஆட்டமிழக்காமல் இருந்து 38 ரன் அடித்தார். இதனால் கொல்கொத்தா அணி 15.4 ஓவரில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து வெற்றியைப் பெற்றது.

கொல்கொத்தா அணியின் பில் சால்ட் தன்னுடைய சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

மும்பை vs சென்னை

சென்னை அணி (206/4, ருதுராஜ் கெய்க்வாட் 69, ஷிவம் துபே 66*, தோனி 20*, ஹார்திக் பாண்ட்யா 2/43) மும்பை அணியை (186/6, ரோஹித் ஷர்மா 105*, திலக் வர்மா 31, இஷான் கிஷன் 23, பதிரனா 4/28) 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இரண்டாவது ஆட்டம் மும்பையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே சென்னை அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரராக ருதுராஜுக்குப் பதிலாக அஜிங்க்யா ரஹானே இறங்கினர். ஆனால் அவர் இரண்டாவது ஓவரில் 5 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா எட்டாவது ஓவரில் 21 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ரஹானே அவுட்டானபோது களம் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் (40 பந்துகளில் 69 ரன்) மற்றும் ஷிவம் துபே (38 பந்துகளில் ஆடமிழக்காமல் 66 ரன்) இருவரும் வேகமாக ரன் சேர்த்தனர். கடைசி நான்கு பந்துகள் ஆடிய மஹேந்திர சிங் தோனி தொடர்ந்து மூன்று சிக்சர்கள் அடித்து மைதானத்தில் ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். சென்னை அணி 20 ஓவர்களில் நாலு விக்கட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

207 ரன் என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த மும்பை அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் 15 பந்துகளில் 23 ரன் அடித்து 7.1ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் இரண்டாவது பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரோஹித் ஷர்மா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 105 ரன் எடுத்தார். ஹார்திக் பாண்ட்யா (2 ரன்), ரொமாரியோ ஷெப்பேர்ட் (1 ரன்), டிம் டேவிட் (13 ரன்) ஆகியொர் இன்று சோபிக்கவில்லை. திலக் வர்மா (31 ரன்) ரோஹித் ஷர்மாவுக்கு சிறிது நேரம் ஜோடியாக ஆடினார். இருப்பினும் மும்பை அணியால் 20 ஓவருக்குள் இலக்கை அடைய முடியவில்லை. 20 ஓவரில் அந்த அணி 6 விக்கட் இழப்பிற்கு 186 ரன் மட்டுமே எடுத்து 20 ரன் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள், குறிப்பாக பதிரனா சிறப்பாக பந்து வீசினார்.

சென்னை அணியின் மதீஷா பதிரனா சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். நாளை பெங்களூருவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம்     

14.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான் 651100.767
கொல்கொத்தா54181.688
சென்னை64280.726
ஹைதராபாத்53260.344
லக்னோ63360.038
குஜராத்6336-0.637
பஞ்சாப்6234-0.218
மும்பை6244-0.234
டெல்லி6244-0.975
பெங்களூரு6152-1.124

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories