IPL 2024: ஒரு ரன்னில் பெற்ற வெற்றி!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

முப்பத்தியின்றாம் நாள்
ஐபிஎல் 2024 – 21.04.2024
இரண்டு ஆட்டங்கள்

இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.

இரண்டாவது ஆட்டம் முல்லன்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ்

பெங்களூரு – கொல்கொத்தா மயிரிழையில் வெற்றி

கொல்கொத்தா அணி (222/6, பில் சால்ட் 48, ஷ்ரேயாஸ் ஐயர் 50, ஆண்ட்ரே ரசல் 27*, ரமன்தீப் சிங் 24*, சிங்கு சிங் 24, யஷ் தயால் 2/56, காம்ரூன் கிரீன் 2/35 ) பெங்களூரு அணியை (221, வில் ஜேக்ஸ் 55, ரஜத் படிதர் 52, தினேஷ் கார்த்திக் 25, கரன் ஷர்மா 20, விராட் கோலி 18, ரசல் 3/25, ஹர்ஷித் ராணா 2/33, சுனி நரேன் 2/34) 1 ரன் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. கொல்கொத்தா ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் பில் சால்ட் (14 பந்துகளில் 48 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் சுனில் நரேன்  (10 ரன்) இருவரின் அதிரடி ஆட்டத்தால் கொல்கொத்தா அணி பவர்பிளே ஓவர்களில் மூன்று விக்கட் இழப்பிற்கு 75 ரன் கள் எடுத்தது.

          பத்தாவது ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் 158/4 ஆக இருந்தது. ஆனால் அதற்குப் பின்னர் டெல்லி அணி பந்துவீச்சாளர்கள் ரன்ரேட்டைக் குறைக்கும் வண்ணம் பந்துவீசினர். ட்ராவிஸ் ஹெட் (32 பந்துகளில் 89 ரன், 11 ஃபோர், 6 சிக்சர்) அபிஷேக் ஷர்மா (12 பந்துகளில் 46 ரன், 2 ஃபோர், 6 சிக்சர்), மர்க்ரம் (1 ரன்), கிளாசன் (15 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (27 பந்துகளில் 37 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), ஷபாஸ் அகமது (29 பந்துகளில் 59 ரன், 2 ஃபோர், 5 சிக்சர்), அப்துல் சமது (8 பந்துகளில் 13 ரன்) என அனைத்து பேட்டர்களும் சிறப்பாக ஆடியதால் கொல்கொத்தா அணி 20 ஓவர் முடிவில் 222 ரன் எடுத்தது.

ALSO READ:  இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

          223 ரன் என்ற கடின இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான விராட் கோலி (7 பந்துகளில் 18 ரன்) 2.1ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.  3.1ஆவது ஓவரில் மற்றொரு தொடக்க வீரரான ட்யு பிளேசிஸ் ஆட்டமிழந்தார்.

 அதன் பின்னர் வில் ஜேக்ஸ் (32 பந்துகளில் 55 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்) மற்றும் ரஜத் படிதர் (23 பந்துகளில் 52 ரன், 3 ஃபோர், 5 சிக்சர்) இருவரும் அணியின் ஸ்கோரை 138 ரன் என்ற அளவிற்கு உயர்த்தினர். 12ஆவது ஓவர் முதல் பந்தில் வில் ஜேக்ஸும் நாலாவது பந்தில் ரஜத் படிதரும் ஆட்டமிழந்தனர். இதற்குப் பிறகு காமரூன் கிரீன் (6 ரன்), மஹிபல் லோமர் (4 ரன்), சிராஜ் (பூஜ்யம் ரன்), ஃபெர்கூசன் (1 ரன்) ஆகியோர் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். ஆயினும் சுயேஷ் பிரபுதேசாய் (24 ரன்), தினேஷ் கார்த்திக் (25 ரன்), கரண் ஷர்மா (20 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 221 ரன் எடுத்தது.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

இதனால் கொல்கொத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஏறத்தாழ வெற்றியை அடையும் நிலைக்கு வந்து பின்னர் துரதிருஷ்டவசமாக 1 ரன்னில் தோல்வியை பெங்களூரு அணி சந்தித்தது. ஆண்ட்ரு ரசல் 3 ஓவர் வீசி 25 ரன் கொடுத்து 3 விக்கட் எடுத்தார்.

          ஹைதராபாத் அணியின் ஆண்ட்ரு ரசல் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காகவும் சிறப்பான பந்துவீச்சிற்காகவும் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைடன்ஸ்

          பஞ்சாப் அணியை (142, பிரப்சிம்ரன் சிங் 35, ஹர்பிரீத் பிரார் 29, சாம் கரன் 20, ஹரபிரீத் சிங் 14, சாய் கிஷோர் 4/33, மோஹித் ஷர்மா 2/32, நூர் முகம்மது 2/20) குஜராத் டடன்ஸ் அணி (19.1 ஓவரில் 146/7, ஷுப்மன் கில் 35, ராகுல் திவாத்தியா 36*, சாய் சுதர்ஷன் 31, ஒமர்சாய் 13, விருத்திமான் சாஹா 13, ஹர்ஷல் படேல் 3/15, லிவிங்க்ஸ்டோன் 2/19) 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. பஞ்சாப் அணியில் ஷிகர் தவான் இன்றும் விளையாடவில்லை. அதனால் அணித்தலைவராகச் செயல்பட்ட சாம் கரன் (20 ரன்) தொடக்கவீரராக பிரப்சிம்ரன் சிங் (35 ரன்) உடன் களமிறங்கினார்.

இவர்கள் இருவரைத்தவிர ஹர்பிரீத் பிரார் (29 ரன்), ஜித்தேஷ் ஷர்மா (13 ரன்), ஹர்பிரீத் சிங் (14 ரன்) ஆகிய வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் எடுத்தனர். ரிலீ ரோஸ்சௌ (9 ரன்), லிவிங்க்ஸ்டோன் (6 ரன்), ஷஷாங்க் சிங் (8 ரன்), அஷுத்தோஷ் ஷர்மா (3 ரன்) ஹர்ஷல் படேல் (பூஜ்யம் ரன்) ஆகியொர் இன்று நிலைத்து ஆடவில்லை. இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 142 ரன் எடுத்தது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

          143 என்ற சுலபமான இலக்கை அடைய இரண்டாவதாக ஆடிய குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் விருத்திமான் சாஹா (13 ரன்), விராட் கோலி (29 பந்துகளில் 35 ரன்) இருவரும் நல்ல தொடக்கம் தந்தனர். சாய் சுதர்ஷன் 31 ரன் எடுத்து அசத்தினார்.

டேவிட் மில்லர் (4 ரன்), அசமத்துல்லா ஒமர்சாய் (13 ரன்), ஷாருக் கான் (8 ரன்), ரஷீத் கான் (3 ரன்) ஆகியோர் இன்று சிறப்பாக ஆடவில்லை. ராகுல் திவாத்தியா ஆட்டமிழக்காமல் 36 ரன் எடுத்ததனால் குஜராத் அணி 19.1 ஓவரில் 7 விக்கட் இழப்பிற்கு 146 ரன் எடுத்து 3 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

சிறப்பாக பந்து வீசிய குஜராத் அணியின் சாய் கிஷோர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

21.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான்761120.677
கொல்கொத்தா752101.206
ஹைதராபாத்752100.914
சென்னை74380.529
லக்னோ74380.123
குஜராத்8448-1.055
மும்பை7346-0.133
டெல்லி8356-0.477
பஞ்சாப்8264-0.292
பெங்களூரு8172-1.046

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

Topics

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.

Entertainment News

Popular Categories