December 5, 2025, 9:04 PM
26.6 C
Chennai

Ind Vs Ban Test: சேப்பாக்கத்தில் இந்திய அணி வெற்றி; ஆட்டநாயகன் அஷ்வின்!

ind vs ban test - 2025
#image_title

நாலாம் நாளில், சேப்பாக்கத்தில் இந்திய அணி வெற்றி – ஆட்டநாயகன் அஷ்வின்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்தியா-வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி – சென்னை- 22.09.2024

          இந்தியஅணி முதல் இன்னிங்க்ஸ் 376 (அஷ்வின் 113, ஜதேஜா 86, மகமுது 5/83, டஸ்கின் 3/81), இரண்டாவதுஇன்னிங்க்ஸ் 287/4 டிக்ளேர்டு (கில் ஆட்டமிழக்காமல் 119, ரிஷப் பந்த் 109) வங்கதேசம் முதல் இன்னிங்க்ஸ் 149 (பும்ரா 4/50, ஆகாஷ்தீப் 2/19, ஜதேஜா 2/19); இரண்டாவது இன்னிங்க்ஸில்234 ஆல் அவுட் (சண்டோ 82, ஷட்மன் 35, சாகிர் 33, ஷாகிப் 25, அஷ்வின் 6/88, ஜதேஜா3/58, பும்ரா 1/18)  இந்திய அணி 280 ரன்கள்வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

          இந்தியமற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்செய்து 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளைக் கொண்டதொடர்களில் விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப் பயணத்தின்முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில்கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசஅணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது.

இந்திய அணியின் முதல் இன்னிங்க்ஸ்

          இதனைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய களம் இறங்கிய இந்தியஅணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் முன்னணி வீரர்களான கில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழக்க இந்தியா 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால்மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். அணியின் ஸ்கோர் 96 ரன்களாக இருந்தபோது 39 ரன்கள் எடுத்திருந்த ரிஷப் பண்ட் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து களம் இறங்கிய ராகுல்18 ரன்களிலும் சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 56 ரன்களிலும்ஆட்டம் இழக்க 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.

ரவி இந்திரனும் ரவி சந்திரனும் செய்தமாயம்

          இந்நிலையில்ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக விளையாடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். இவர்கள் இருவரும் ஏழாவது விக்கெட்டுக்கு ஜோடியாக 199 ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடியின் அபாரமானஆட்டத்தால் இந்தியா சரிவிலிருந்து மீண்டதோடு டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு முன்னேறியது. சிறப்பாக ஆடிய அஸ்வின் டெஸ்ட்போட்டிகளில் தனது ஆறாவது சதத்தைபதிவு செய்தார். ரவீந்திர ஜடேஜா அபாரமாக விளையாடி அரை சதம் எடுத்தார்.இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா முதல் நாள் ஆட்ட நேரமுடிவில் 339 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்திருந்தது.

          இதனைத்தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தஇந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா 86 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து ஆகாஷ் தீப் 17 ரன்களில் அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய அஸ்வின் 133 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 113 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில்376 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.வங்கதேச அணியின் பந்துவீச்சில் ஹசன் மக்மூத் 5 விக்கெட்டுகளும்தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

          இதனையடுத்துஇரண்டாம் நாள் உணவு இடைவேளைக்குமுன்பாக வங்கதேச அணி தனது பேட்டிங்கைதொடங்கியது. அந்த அணிக்கு ஆரம்பமேஅதிர்ச்சி காத்திருந்தது வங்கதேச அணியின் தொடக்க வீரர் சத்மான் இஸ்லாம் முதல் ஓவரிலேயே 2 ரன்கள் எடுத்த நிலையில் ஜஸ்பிரீத் பும்ரா பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஜாகிர் ஹசன் 3 ரன்னிலும், முமீனுல் ஹக் ரன் எதுவும் எடுக்காமலும்ஆகாஷ் தீப் பந்து வீச்சில்கிளீன் போல்ட் ஆகி வெளியேறினர். இதனால்இரண்டாம் நாள் உணவு இடைவேளையின்போது வங்கதேச அணி 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.

          உணவுஇடைவேளைக்குப் பின் இந்திய அணியின்நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா பந்துவீச்சில் வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகள்இழந்து இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. அந்த அணியின் அனுபவவீரர் ஷகீப் அல் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் ஓரளவுதாக்குப்பிடித்து ஆடினர். எனினும் வங்கதேச அணியால் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. லிட்டன் தாஸ் 22 ரன்னிலும் ஷகீப் 32 ரன்னிலும் ஆட்டம் இழக்க வங்கதேச அணியால் சரிவிலிருந்து மீள முடியவில்லை. இதனைத்தொடர்ந்து அந்த அணி தங்களதுமுதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.சிறப்பாக பந்து வீசிய பும்ரா 50 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மேலும் முகமது சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் ரவீந்திரஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

          வங்கதேசஅணி ஃபாலோ ஆன் செய்யச்சொல்லியிருக்கலாம் ஆனாலும் சென்னையில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக இந்தியா மீண்டும் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் சொதப்பிய ரோஹித் சர்மா இரண்டாவது இன்னிங்ஸிலும் 5 ரன்களில் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும் விராட் கோலி 17 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இவர்களுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த ரிஷப்பண்ட் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் சிறப்பாக விளையாடி இந்திய அணியை ஆரம்ப சரிவிலிருந்து மீட்டனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்ட நேரமுடிவில் இந்தியா 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்திருந்தது.

          இதனைத்தொடர்ந்து தங்களது மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கியஇந்திய அணி ஆரம்பத்தில் நிதானமாகவிளையாடினாலும் அதன் பிறகு அதிரடிபாணியை கடைப்பிடித்தது. இதனால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. கில் மற்றும் ரிஷப்பண்ட் ஆகிய இருவரும் தங்களதுஅரை சதத்தை கடந்தனர். சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் திரும்பிய ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி டெஸ்ட் போட்டிகளில் தனது ஐந்தாவது சதத்தைபூர்த்தி செய்தார். இவர் 128 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் டெஸ்ட் போட்டிகளில்மற்றொரு சதத்தை பதிவு செய்தார். இந்நிலையில் இந்தியா 287 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்திருந்த போது டிக்ளேர் செய்தது.சுப்மன் கில் 119 ரன்களிலும் கேஎல் ராகுல் 22 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

          இதனைத்தொடர்ந்து வங்கதேச அணிக்கு வெற்றி இலக்காக 515 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை வங்கதேச அணி சிறப்பாக தொடங்கியது.அந்த அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர். அப்போது 32 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த ஜாகிர் ஹசன் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் சத்மான் இஸ்லாம் 35 ரன்னிலும் முமீனுல் ஹக் 13 ரன்னிலும் அவுட் ஆகினர். மேலும் அனுபவ வீரர் முஸ்பிகுர் ரஹீம் 13 ரன்னிலும் அஸ்வின் சுழலில் ஆட்டம் இழந்தனர். இதனால் வங்கதேச அணி மூன்றாம் நாள்ஆட்ட நேரம் முடிவில் 158 ரண்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்திருந்தது.

          இதனைத்தொடர்ந்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தில் வங்கதேசஅணியின் கேப்டன் நஜ்முல் ஹுசைன் சாண்டோ சிறப்பாக விளையாடி அரை சதம் எடுத்தார்.எனினும் அந்த அணியின் மற்றவீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அனுபவ வீரர் ஷகீப் அல் ஹசன் 25 ரன்னிலும், லிட்டன் தாஸ் 1 ரன்னிலும் மெஹதி ஹசன் 8 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இறுதியில் சிறப்பாக ஆடிவந்த சான்டோ 82 ரன்களில் அவுட் ஆனார். மேலும் பின் வரிசை ஆட்டக்காரர்கள்ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்ததால் வங்கதேச அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

          இன்றுபோட்டி தொடங்கிய நேரம் முதல் வங்கதேச அணி வீரர்கள் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் சான்டோ அதிரடியாக ஆட அனுபவ வீரர்ஷகிப் அல் ஹசன் நிதானமாகவிளையாடி வந்தார். இவர்கள் இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடியாக 52 ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடியின் ஆட்டம்இந்திய அணிக்கு சற்று தலைவலியாக அமைந்தது. எனினும் ஷகீப் அல் ஹசன் விக்கெட்டைஅஸ்வின் கைப்பற்றியதை தொடர்ந்து வங்கதேச அணியினர் இந்தியாவின் சுழற் பந்து ஜோடி அஸ்வின் மற்றும்ரவீந்திர ஜடேஜாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் 196 ரன்களுக்கு4 விக்கெட் இழந்திருந்த வங்கதேச அணி அடுத்த 30 நிமிடங்களில்மீதமுள்ள 6 விக்கெட்டுகள் இழந்து ஆல் அவுட் ஆனது.இதனைத் தொடர்ந்து இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைபெற்றிருக்கிறது.

          இந்தப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி சதம் எடுத்த தமிழகவீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசி 88 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மேலும் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் ஜஸ்ப்ரீத் பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம்இந்திய அணி உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிகள் பட்டியலில் தங்களது முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது. இந்தப்போட்டியில் சிறப்பாக சதம் அடித்ததோடு இரண்டாவதுஇன்னிங்ஸில் 6 விக்கெட் கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

          ரோஹித்ஷர்மா மற்றும் விராட் கோலியின் ஃபார்ம் தற்போது கவலை அளிக்கிறது. வருகின்ற 27ஆம் தேதிகான்பூரில் இரண்டாவது டெஸ்ட் தொடங்க உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories