திகாரில் கார்த்தி சிதம்பரத்துக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கக் கூடாது: நீதிபதி கண்டிப்புடன் கூடிய உத்தரவு

karthi cbi - 2026

புது தில்லி:

தில்லி திகார் சிறையில் அடுத்து வரும் 12 நாட்கள், அதாவது மார்ச் 24 வரை அடைக்கப்படும் கார்த்தி சிதம்பரத்துக்கு எவ்வித சலுகையும் வழங்கக் கூடாது என்று சிறைத் துறைக்கும் தில்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி சுனில் ராணா கண்டிப்புடன் கூடிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் இருந்த போது அன்னிய முதலீடுக்கான தடையில்லாச் சான்றிதழுக்கு, தனது தந்தையின் நிதி அமைச்சர் என்ற செல்வாக்கைப் பயன்படுத்தி, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் ரூ.10 லட்சம் தரகுத் தொகை பெற்றதாக, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ., குற்றம் சாட்டியது.

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ ., கைது செய்து விசாரித்து வருகிறது. அவரை தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிபிஐ ., 4 முறை ஆஜர்படுத்தி, ஒவ்வொரு முறையும் காவல் நீட்டிப்பு பெற்றது. தங்களின் விசாரணைக்கு கார்த்தி ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறியது சிபிஐ.,

தொடர்ந்து, 4-ஆவது முறையாகக் கொடுக்கப்பட்ட நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் கார்த்தி சிதம்பரத்தை இன்று தில்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி சுனில் ராணா முன்பு சிபிஐ., ஆஜர்படுத்தியது. அப்போது சிபிஐ அதிகாரிகள் , கார்த்தியை சிறையில் அடைக்க கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்ற நீதிபதி, கார்த்தி சிதம்பரத்தை திகார் சிறையில் 12 நாட்கள் அடைக்க உத்தரவிட்டார்.

அப்போது, தனது தந்தை முன்னாள் மத்திய அமைச்சர் என்பதால், வெளியிலிருந்து உணவு கொண்டு வருவது உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும்; தனி செல்லில் தான் அடைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நீதிபதி முன் வைத்தார் கார்த்தி.

ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி, கார்த்தி சிதம்பரத்துக்கு சிறப்பு சலுகைகள் ஏதும் கிடையாது. தந்தை முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தாலும் எவ்வித சலுகையும் கொடுக்கக் கூடாது. மற்ற கைதிகளைப் போலவே கார்த்தியும் நடத்தப்பட வேண்டும். அவருக்கென தனி அறை ஒதுக்கக் கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதை அடுத்து திகார் சிறைக்கு கார்த்தி சிதம்பரம் அழைத்துச் செல்லப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories