மோடி எதிர்கொள்ளும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்: வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்; அதிமுக., ஆதரவு!

modi with students - 2026

புது தில்லி:மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் என்று கூறப் படுகிறது.

மத்தியில் ஆளும் தே.ஜ.கூட்டணியில் இருந்து விலகுவதாக தெலுங்கு தேசம் அறிவித்துள்ள நிலையில்,  மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தெலுங்கு தேசம் கட்சி தயாராகி வருகிறது.

ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து அளிக்காததால் சந்திரபாபு நாயுடு அதிருப்தியில் இருந்ததாகவும், அதனால் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகுவதாகவும் அறிவித்தார். ஏற்கெனவே, தெலங்கானா ராஷ்டிரீய சமிதி உள்ளிட்ட கட்சிகளும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து பேசி வந்தன.

இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால், அதை  அதிமுக ஆதரிக்கும் என்று முன்னாள் எம்.பி கே.சி. பழனிசாமி கூறியுள்ளார்.

மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதை ஆதரிப்பது என்று அதிமுக., முடிவு செய்துள்ளதாக, அதிமுக., முன்னாள் எம்.பி.,  கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார். குறிப்பாக,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்போம் என்று அவர் கூறினார்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட ஆந்திர, தெலங்கானா மாநிலக் கட்சிகள்  நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன.

மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள உள்ளார் என்று கூறப் படுகிறது. நேற்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த நோட்டீஸ் கொடுத்துள்ளது. பொதுவாக, இது போன்ற நோட்டீஸ் மீது வாக்கெடுப்பு நடத்தப் பட வேண்டுமானால், அவையின் 50 எம்.பி.க்களின் ஆதரவு குறிப்பிடப் பட வேண்டும். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நோட்டீஸ் மீது தெலுங்கு தேசமும் ஆதரவளிக்கக் கூடும். தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் 6ம் தேதி நிறைவடைகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories