தேர்தல் படுத்தும் பாடு: லிங்காயத் சமூகத்தை தனிப் பிரிவாக அங்கீகரித்தது கர்நாடகா

lingayat veerasaiva - 2026

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தேர்தல் வருகிறது. இதை ஒட்டி ஓட்டுக்காக பல்வேறு பிரிவினைவாதச் செயல்களில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அண்மையில் கர்நாடக மாநிலத்துக்கு என தனி கொடி அறிமுகம் செய்து அதனை அங்கீகரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இப்போது மீண்டும் அதே போன்ற ஒரு செயலில் ஈடுபட்டுள்ளது ஆளும் காங்கிரஸ் கட்சி.

கர்நாடக மாநிலத்தில் பரவலாக வசிக்கும் லிங்காயத் சமூகத்தினர், தங்களை இந்து மதத்தில் இருந்து பிரித்து தனி பிரிவாக அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை கையாள்வதற்காக நாகமோகன் தாஸ் தலைமையில் மாநில அரசு ஒரு கமிட்டி அமைத்திருந்தது. இந்தக் கமிட்டி பரிந்துரை செய்ததன் பேரில் லிங்காயத் சமூகத்தை தனிப் பிரிவாக அம்மாநில அமைச்சரவை இன்று அங்கீகரித்தது. இதே கோரிக்கையை பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு மாநில அரசு அனுப்பி வைத்துள்ளது.

12ம் நூற்றாண்டில் வாழ்ந்த பசவண்ணரை குருவாகக் கொண்ட லிங்காயத் சமூகத்தினர் தங்களை வீர சைவர்கள் மரபில் இருந்து தனித்து அறிவித்துக் கொள்கின்றனர். வீர சைவர்கள் பொதுவான ஒரு இந்து சமூகக் கட்டுக்குள் சனாதன தர்மத்தை அடிஒற்றி இருப்பவர்கள். இதனால் வேத கோட்பாடுகளை மறுதலித்த லிங்காயத் பிரிவினர், தங்களை தனி மதப் பிரிவினராக அங்கீகரிக்கக் கோரினர். இதற்காக தொடர்ந்து போராட்டங்களையும் செய்து வந்தனர். லிங்காயத் சமூக வழிபாடும் சடங்குகளும் இந்து சமூகத்துக்குள் அடக்கம் என்றாலும், லிங்காயத் பிரிவினரின் இந்தக் கோரிக்கைகள் பாஜக உள்ளிட்ட இந்து சமய அமைப்புகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாகத்தான் இருந்தது. இதற்காக பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. ஆனால், அவர்களின் கோரிக்கையை ஏற்றது ஆளும் கர்நாடக காங்கிரஸ். எனவே இது தொடர்பாக பரிந்துரை செய்ய குழு அமைத்தது.

இந்நிலையில் நேற்று முதல்வர் சித்தராமையாவை சந்தித்துப் பேசினர் லிங்காயத் சமூக மடாதிபதிகள். இந்நிலையில் இன்று கர்நாடக அமைச்சரவை லிங்காயத்துகளின் கோரிக்கையை பரிசீலித்து, அவர்களை தனிப் பிரிவாக அங்கீகரித்தது. பின் இது மத்திய அரசுக்கும் அனுப்பப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories