சக்தி வாய்ந்த மனிதர்கள் என்ற பட்டியலில் இந்த முறை ரஜினியும் இடம்பிடித்தார். ஆனால், அவருக்கு 78-வது இடம் கிடைத்துள்ளது. காரணம், ரஜினி இந்த முறை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றிருப்பதனால்தான்!
இந்தியாவிலுள்ள பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று, இந்தியாவிலுள்ள சக்தி வாய்ந்த மனிதர்கள் என்ற பட்டியலில் 100 பேரை தேர்வு செய்து ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் வழக்கம்போல், முதல் இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பாஜக தலைவர் அமித்ஷா 2வது இடமும், இந்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா 3வது இடமும், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் ஜி பாகவத் 4வது இடமும், சோனியா காந்தி 5வது இடமும் பிடித்துள்ளனர்
இந்தப் பட்டியலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் உள்ளார். அவருக்கு 64வது இடமும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு 65வது இடமும் கிடைத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்துக்கு 78வது இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் அரசியல் களத்தில் இறங்கவுள்ள ரஜினிக்கு, அரசியல் ரீதியாக செல்வாக்கு அதிகரித்திருப்பதால் அவருக்கு 78-வது இடம் கிடைத்துள்ளது.