புது தில்லி:
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், பிரதமர் அணியக்கூடிய உடையை விமர்சிக்கிறார். இது அவரின் குழந்தைத் தனமான போக்கையே காட்டுகிறது. ராகுலின் தந்தை ராஜீவ், தாத்தா ஜவகர்லால் நேரு இருவரும் ‘கோட் – சூட்’ அணிந்தவர்கள்தான் என்பதை ராகுல் மறந்து விடக்கூடாது. தன்னைப் பற்றி தினமும் ஊடங்கங்களில் செய்தி வர வேண்டும் என்பதற்காக பிரதமரை ராகுல் விமர்சிக்கிறார் என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு.


