சீனாவுடன் நீண்ட கால வளர்ச்சி அடிப்படையில் இருதரப்பு உறவில் மறு ஆய்வு: மோடி

Published:

modi speech in london4 - 2026

இந்தியா, சீனா இடையிலான உறவில் நீண்டகால அடிப்படையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி அடிப்படையில் மறு ஆய்வு செய்யப்பட்டு தொலைநோக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், சீன அதிபருடன் நடத்தப் படும் பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிக்கிம் எல்லையை ஒட்டிய டோக்லாம் பகுதியில் இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதலால் இரு தரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதை சரிசெய்யும் வகையில் இரு தரப்பு மாநாடு சீனாவின் வுஹான் நகரில் இன்றும் நாளையும் இருநாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க சீனா சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

தனது பயணம் குறித்து மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில் “சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேச உள்ளேன். அப்போது, இருதரப்பு மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்படும். குறிப்பாக, இப்போதுள்ள சர்வதேச சூழலில், இரு நாடுகளின் வளர்ச்சி தொடர்பான தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் முன்னுரிமை வழங்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளோம். மேலும் நீண்டகால அடிப்படையில் இந்தியா, சீனா இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி தொடர்பாக மறு ஆய்வு செய்யப்படும்” என கூறியிருந்தார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img