கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத்துக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வாக்குச் சாவடிகளுக்கு வந்து காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
காங்கிரஸ், பாஜக., ம.ஜ.த., என கட்சிகள் வாக்காளர்களைக் கவர பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, வாக்குச் சாவடிக்கு வரவழைத்துள்ளன. வயதானவர்கள் முதல் பலரும் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்கின்றனர்.
இவர்களில் இருவர் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். ஒரு தம்பதி, கல்யாணக் கோலத்துடன், மணமக்களுக்கான உடையுடன் வாக்குச் சாவடிக்கு மாலையும் கழுத்துமாக வந்து நின்றனர்.
தாலி கட்டி மஞ்சள் பொட்டு வெச்சி மங்கலகரமா வாழ்க்கையை துவக்கின கையோட கையில் விரலை கருப்பாக்கி மையை வைத்துக் கொள்ள வந்த அந்தத் தம்பதியைப் பார்த்து வாக்குச் சாவடியில் வரிசையில் நின்றிருந்த பலரும் அதிசயித்துப் பார்த்தனர்.