December 6, 2025, 1:24 AM
26 C
Chennai

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலிடம் இன்று போலீஸ் விசாரணை

34 May17 arvind - 2025டில்லியில், தலைமைச் செயலர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் போலீசார், இன்று விசாரணை நடத்தவுள்ளனர்.

டில்லியில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில், பிப்ரவரியில் நடந்த கூட்டத்தில், மாநில தலைமைச் செயலர், அன்ஷு பிரகாஷ், ஆம் ஆத்மி கட்சியினரால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம், டில்லி மாநில அரசுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் மோதலை ஏற்படுத்தியது.இந்நிலையில், தலைமைச் செயலர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முதல்வர் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த, போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, அவருக்கு, ‘நோட்டீஸ்’ அளித்துள்ளதாக, கூடுதல், டி.சி.பி., ஹரேந்திர சிங் நிருபர்களிடம் கூறினார்.இதுகுறித்து, ஹரேந்திர சிங் கூறுகையில், ‘நாளை, அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த உள்ளோம். வீட்டில் அல்லது அலுவலகத்தில் விசாரணை நடத்த வேண்டுமா என்பதை தெரிவிக்கும்படி, அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது’ என்றார்.

முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, 11, எம்.எல்.ஏ.,க்களிடம், தலைமைச் செயலர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். முதல்வரின் தனிச் செயலர், பிபவ் குமாரிடமும் விசாரணை நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories