அரசு விளம்பரங்களில் தலைவர்கள் படங்களுக்கு தடை: மறுபரிசீலனை கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

புது தில்லி:

அரசு விளம்பரங்களில் தலைவர்கள் படங்களுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் முறையிடப்பட்டுள்ளது.

அரசு செலவில் வெளியிடப்படும் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி படங்களைத் தவிர, வேறு அரசியல் தலைவர்களின் படங்களை வெளியிடக் கூடாது என்று கடந்த மே 13ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், சிபிஐஎல் என்ற அமைப்பு சார்பில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில், ‘அரசு விளம்பரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சில மாநில அரசுகள் மீறியுள்ளன. குறிப்பாக, தமிழகம் மற்றும் தில்லி மாநில அரசுகள் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளதால், அந்த அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இம்மனு மீது மத்திய அரசு பதிலளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இம்மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பினாகி சந்திர கோஸ் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜரானார். அப்போது, ‘அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் படங்கள் இடம் பெறக் கூடாது என்ற உத்தரவு தவறானது. இதில் எந்த கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது. எனவே, உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்துள்ள உத்தரவை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் மத்திய அரசுக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று முறையிட்டார்.

இதுதொடர்பான வழக்கை ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த காமன்காஸ் அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ‘அரசு விளம்பரம் தொடர் பான உச்ச நீதிமன்ற உத்தரவை சில மாநில அரசுகள் மதிக்கவில்லை. மத்திய அரசு 6 மாதங்கள் கழித்து, உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி மனு தாக்கல் செய்கிறது. அரசு விளம்பரங்களை கண்காணிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை குழுவை அமைக்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் தாமதிப்பதும், அவகாசம் கோருவதும் இந்த உத்தரவின் நோக்கத்தையே சிதைத்துவிடும்’ என்று வாதிட்டார்.

இவ்வாறு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசின் முறையீட்டை வரும் ஜனவரி 12ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தனர். இதை அடுத்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

Entertainment News

Popular Categories