அரசு விளம்பரங்களில் தலைவர்கள் படங்களுக்கு தடை: மறுபரிசீலனை கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

புது தில்லி:

அரசு விளம்பரங்களில் தலைவர்கள் படங்களுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் முறையிடப்பட்டுள்ளது.

அரசு செலவில் வெளியிடப்படும் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி படங்களைத் தவிர, வேறு அரசியல் தலைவர்களின் படங்களை வெளியிடக் கூடாது என்று கடந்த மே 13ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், சிபிஐஎல் என்ற அமைப்பு சார்பில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில், ‘அரசு விளம்பரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சில மாநில அரசுகள் மீறியுள்ளன. குறிப்பாக, தமிழகம் மற்றும் தில்லி மாநில அரசுகள் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளதால், அந்த அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இம்மனு மீது மத்திய அரசு பதிலளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இம்மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பினாகி சந்திர கோஸ் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜரானார். அப்போது, ‘அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் படங்கள் இடம் பெறக் கூடாது என்ற உத்தரவு தவறானது. இதில் எந்த கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது. எனவே, உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்துள்ள உத்தரவை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் மத்திய அரசுக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று முறையிட்டார்.

இதுதொடர்பான வழக்கை ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த காமன்காஸ் அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ‘அரசு விளம்பரம் தொடர் பான உச்ச நீதிமன்ற உத்தரவை சில மாநில அரசுகள் மதிக்கவில்லை. மத்திய அரசு 6 மாதங்கள் கழித்து, உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி மனு தாக்கல் செய்கிறது. அரசு விளம்பரங்களை கண்காணிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை குழுவை அமைக்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் தாமதிப்பதும், அவகாசம் கோருவதும் இந்த உத்தரவின் நோக்கத்தையே சிதைத்துவிடும்’ என்று வாதிட்டார்.

இவ்வாறு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசின் முறையீட்டை வரும் ஜனவரி 12ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தனர். இதை அடுத்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories