விவசாயக் கடன் தள்ளுபடி கோரி பாஜக., நாளை பந்த்: எடியூரப்பா உறுதி!

yediyurappa in house - 2026

பெங்களூர்:  விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி, நாளை கர்நாடக மாநிலத்தில் பாஜக., சார்பில் ‘பந்த்’ நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், பெங்களூர் ஆர்.ஆர்.நகரில்  நாளை தேர்தல் நடக்க இருப்பதால், பெங்களூரு தவிர  மாநிலத்தின் மற்ற பகுதிகளில் 28ஆம் தேதி பந்த் உறுதியாக நடக்கும் என  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

‘ம.ஜ.த., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி  முதல்வர் குமாரசாமி  விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லையெனில்  இம்மாதம் 28ஆம் தேதி மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பாக  செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா,  “தேர்தலுக்கு முன், முதல்வர் குமாரசாமி  விவசாயக் கடனை ரத்து செய்வதாகக் கூறியிருந்தார். ஆனால், பதவிக்கு வந்ததும் செய்யவில்லை. இப்போது ‘தனிக்கட்சியாக ஆட்சியை பிடித்திருந்தால் தள்ளுபடி செய்வேன்’ என சால்ஜாப்பு சொல்கிறார்.

விவசாயக் கடன் தள்ளுபடி செய்யும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.  விவசாயிகளே  பந்த் நடத்துவர்; இவர்களுக்கு பாஜக, ஆதரவளிக்கும்.

சட்டசபைக்கு உள்ளேயும்  வெளியேயும் பொறுப்பான எதிர்க்கட்சியாக, பாஜக., செயல்படும். நாளை, ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் தேர்தல் நடப்பதால், பெங்களூரு தவிர, மாநிலம் முழுவதும் பந்த் நடத்துவது உறுதி.

மஜத., – காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து, ஆர்.ஆர்.நகர், ஜெய நகரில் பாஜக, வேட்பாளர்களை  மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று கூறினார் எடியூரப்பா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories