விவசாயக் கடன் தள்ளுபடி கோரி பாஜக., நாளை பந்த்: எடியூரப்பா உறுதி!

yediyurappa in house - 2026

பெங்களூர்:  விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி, நாளை கர்நாடக மாநிலத்தில் பாஜக., சார்பில் ‘பந்த்’ நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், பெங்களூர் ஆர்.ஆர்.நகரில்  நாளை தேர்தல் நடக்க இருப்பதால், பெங்களூரு தவிர  மாநிலத்தின் மற்ற பகுதிகளில் 28ஆம் தேதி பந்த் உறுதியாக நடக்கும் என  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

‘ம.ஜ.த., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி  முதல்வர் குமாரசாமி  விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லையெனில்  இம்மாதம் 28ஆம் தேதி மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பாக  செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா,  “தேர்தலுக்கு முன், முதல்வர் குமாரசாமி  விவசாயக் கடனை ரத்து செய்வதாகக் கூறியிருந்தார். ஆனால், பதவிக்கு வந்ததும் செய்யவில்லை. இப்போது ‘தனிக்கட்சியாக ஆட்சியை பிடித்திருந்தால் தள்ளுபடி செய்வேன்’ என சால்ஜாப்பு சொல்கிறார்.

விவசாயக் கடன் தள்ளுபடி செய்யும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.  விவசாயிகளே  பந்த் நடத்துவர்; இவர்களுக்கு பாஜக, ஆதரவளிக்கும்.

சட்டசபைக்கு உள்ளேயும்  வெளியேயும் பொறுப்பான எதிர்க்கட்சியாக, பாஜக., செயல்படும். நாளை, ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் தேர்தல் நடப்பதால், பெங்களூரு தவிர, மாநிலம் முழுவதும் பந்த் நடத்துவது உறுதி.

மஜத., – காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து, ஆர்.ஆர்.நகர், ஜெய நகரில் பாஜக, வேட்பாளர்களை  மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று கூறினார் எடியூரப்பா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories