தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுக்கு மோடி ஏன் நேரடியாக வருத்தம் தெரிவிக்கவில்லை? இதுதான் காரணமா?

subramanian swami4 - 2026

தமிழகத்தை மட்டுமல்ல, நாட்டையே உலுக்கியது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம். இதற்கு பலரும் கண்டனமும் எதிர்ப்பும் வருத்தமும் தெரிவித்தனர்.

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22 23ஆம் தேதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 போ் கொல்லப்பட்டதற்கு, ஐ.நா. மனித உாிமைகள் ஆணையம் உட்பட பலரும் கண்டனம் தொிவித்துள்ளனா். ஆனால் பிரதமர் மோடி வெளிப்படையாக ஏன் இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை? இந்தக் கேள்வி பலரது மனத்திலும் உள்ளதுதான்?

இது குறித்து செய்தியாளர்களும் தமிழக பாஜக., தலைவர்களிடம் கேட்டுத்தான் வருகின்றனர். இந்தக் கேள்விக்கு இரு தினங்களுக்கு முன்னர் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாட்டின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தமது வருத்தத்தை உடனே பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார் என்றும், இது குறித்து விசாரித்தறிய வேண்டும் என்றும் கூறியதாகவும் பதிலளித்தார்.

ஆனால், இப்போது புதிய ஒரு தகவலை அளித்துள்ளார் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த முழுமையான அறிக்கை கிடைக்காததால் பிரதமா் நரேந்திர மோடி வருத்தம் தொிவிக்கவில்லை என்று கூறியுள்ளார் அவர்.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

இது தொடர்பாக, சுப்பிரமணியன் சுவாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவர் பதில் கூறியபோது, ஸ்டொ்லைட் போராட்டத்தில் உயிாிழந்தவா்கள் பாமர மக்களா? விடுதலைப் புலிகளா? நக்சலைட்டுகளா என்பது முதலில் தொிய வேண்டும். இது தொடா்பான முழுமையான அறிக்கை கிடைக்காததால் பிரதமா் மோடி கருத்து தொிவிக்கவில்லை… என்றார்.

உண்மையில் இதுதான் காரணமா என்பது மோடிக்கு மட்டுமே தெரியும். இருப்பினும், மக்கள் போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து உடனடியாக வருத்தம் தெரிவித்திருக்கலாம் என்றுதான் அரசியல்வாதிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், சுப்பிரமணிய சுவாமி கூறியது போல், உயிரிழந்த  வர்களில், நக்சல் இயங்கங்களைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் அதிகம் என்று தெரியவருகிறது.

சுப்பிரமணியன் சுவாமி மேலும் கூறுகையில், வீரன் போல் வசனம் பேசிய சீமான் காணாமல் போய்விட்டாா். அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. காவல் துறையினர் அவரை கைது செய்வர்… என்றார்.

அது போல், நடிகரான ரஜினிகாந்த் இன்றைக்கு இருப்பாா், நாளைக்கு இருப்பாரா என்பது அவருக்கே தொியாது… என்று கூறினார் சுப்பிரமணியன் சுவாமி.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories