தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுக்கு மோடி ஏன் நேரடியாக வருத்தம் தெரிவிக்கவில்லை? இதுதான் காரணமா?

subramanian swami4 - 2026

தமிழகத்தை மட்டுமல்ல, நாட்டையே உலுக்கியது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம். இதற்கு பலரும் கண்டனமும் எதிர்ப்பும் வருத்தமும் தெரிவித்தனர்.

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22 23ஆம் தேதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 போ் கொல்லப்பட்டதற்கு, ஐ.நா. மனித உாிமைகள் ஆணையம் உட்பட பலரும் கண்டனம் தொிவித்துள்ளனா். ஆனால் பிரதமர் மோடி வெளிப்படையாக ஏன் இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை? இந்தக் கேள்வி பலரது மனத்திலும் உள்ளதுதான்?

இது குறித்து செய்தியாளர்களும் தமிழக பாஜக., தலைவர்களிடம் கேட்டுத்தான் வருகின்றனர். இந்தக் கேள்விக்கு இரு தினங்களுக்கு முன்னர் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாட்டின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தமது வருத்தத்தை உடனே பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார் என்றும், இது குறித்து விசாரித்தறிய வேண்டும் என்றும் கூறியதாகவும் பதிலளித்தார்.

ஆனால், இப்போது புதிய ஒரு தகவலை அளித்துள்ளார் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த முழுமையான அறிக்கை கிடைக்காததால் பிரதமா் நரேந்திர மோடி வருத்தம் தொிவிக்கவில்லை என்று கூறியுள்ளார் அவர்.

இது தொடர்பாக, சுப்பிரமணியன் சுவாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவர் பதில் கூறியபோது, ஸ்டொ்லைட் போராட்டத்தில் உயிாிழந்தவா்கள் பாமர மக்களா? விடுதலைப் புலிகளா? நக்சலைட்டுகளா என்பது முதலில் தொிய வேண்டும். இது தொடா்பான முழுமையான அறிக்கை கிடைக்காததால் பிரதமா் மோடி கருத்து தொிவிக்கவில்லை… என்றார்.

உண்மையில் இதுதான் காரணமா என்பது மோடிக்கு மட்டுமே தெரியும். இருப்பினும், மக்கள் போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து உடனடியாக வருத்தம் தெரிவித்திருக்கலாம் என்றுதான் அரசியல்வாதிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், சுப்பிரமணிய சுவாமி கூறியது போல், உயிரிழந்த  வர்களில், நக்சல் இயங்கங்களைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் அதிகம் என்று தெரியவருகிறது.

சுப்பிரமணியன் சுவாமி மேலும் கூறுகையில், வீரன் போல் வசனம் பேசிய சீமான் காணாமல் போய்விட்டாா். அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. காவல் துறையினர் அவரை கைது செய்வர்… என்றார்.

அது போல், நடிகரான ரஜினிகாந்த் இன்றைக்கு இருப்பாா், நாளைக்கு இருப்பாரா என்பது அவருக்கே தொியாது… என்று கூறினார் சுப்பிரமணியன் சுவாமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories