காதல் ஜோடிக்கு அடி உதை: மும்பை போலீஸார் வெறிச்செயல்

Published:

மும்பை:
மும்பை காவல் நிலையத்தில் கால் சென்டரில் பணிபுரியும் இளம் காதல் ஜோடியை காவல்துறையினர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் இளம் காதலர்களை காவல்துறையினர் தாக்குகின்றனர். வலி தாங்காமல் அந்த இளம் பெண் கதறி அழுகிறார். எங்களை விட்டுவிடுங்கள் என்று அந்த காதல் ஜோடி கெஞ்சிக் கேட்கிறது. ஆனாலும் , மும்பை போலீஸார் அவர்களை அடித்து உதைத்து மிருகனத்தனமாக நடந்துகொள்கின்றனர்.

மும்பையில் உள்ள மகேந்திரா கால் சென்டரில் வேலை பார்க்கும் இந்த இளம் காதல் ஜோடியை,விசாரணை என்ற பெயரில் மும்பையில் உள்ள அந்தேரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீஸார், விசாரணைக்கு அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்பதால் இளம் ஜோடியை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் இளம் பெண்ணை பலமுறை கன்னத்தில் அடிக்கிறார் பெண் போலீஸ். அப்போது அவரது வாயில் இருந்து இரத்தம் கொட்டியதாம். பின்னர் இளைஞரை போலீஸார் தாக்க, அவருடன் வந்த இளம் பெண் அவரை அடிக்க வேண்டாம் என கதறி அழுதுக்க் கேட்டும் போலீஸார் தாக்குகின்றனர். இந்த வீடியோ இப்போது வைரலாக இணையதளத்தில்பரவி வருகிறது.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img