சென்னை:
திமுகவின் தலைமைப் பொறுப்புக்கு தகுதியானவர் மு.க.ஸ்டாலின் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நமக்கு நாமே திட்டம் என்ற பெயரில் மு.க. ஸ்டாலின் மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டு வருகிறார். இந்நிலையில், கழகத்தின் தலைமைப் பொறுப்புக்குத் தகுதி மிக்கவராக ஸ்டாலின் விளங்குகிறார் என்பது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்த உண்மை என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி.
கழகத்தின் தலைமைப் பொறுப்புக்குத் தகுதி மிக்கவராக @mkstalin விளங்குகிறார் என்பது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்த உண்மை. #DMK
— KalaignarKarunanidhi (@kalaignar89) November 3, 2015