ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

supreme court of india - 2026

புது தில்லி : ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் அல்ல அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டப் பிரிவு 377 ஐ ரத்து செய்வதாகவும் கூறியுள்ளது. 377வது சட்டப்பிரிவு நீக்கப்படுவதாக 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமித்த கருத்துடன் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.

1861ஆம் ஆண்டு ஓரினச் சேர்க்கை குறித்த சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதனை அப்படியே எடுத்துக் கொண்டு, இந்திய குற்றவியல் சட்டம் 377வது பிரிவில் இதே அம்சம் சேர்க்கப் பட்டது.

அதன்படி, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் என்றும், அதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, மற்றும் அபராதம் விதிக்கலாம். இந்திய குற்றவியல் சட்டம் 377வது பிரிவின் படி, இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த சட்டப் பிரிவை எதிர்த்து ‘நாஸ்’ அறக்கட்டளை தில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் பதிவு செய்தது. தில்லி உயர் நீதிமன்றமும் ‘இந்த சட்டப் பிரிவு சட்டவிரோதமானது’ என கடந்த 2009 ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது.

இதை அடுத்து, தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, கடந்த 2013 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இந்தத் தடையை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் மறு சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணை செய்யப் பட்டன.

இந்த வழக்கின் விசாரணையின் போது, ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உடல் உறவு கொள்வதை அனுமதிப்பது குறித்து நீதிமன்றத்தின் முடிவை ஏற்பதாகவும், அதே நேரம் ‘இயற்கைக்கு மாறான சிறுவர் – சிறுமியர் மற்றும் விலங்குகளுடன் கொள்ளும் உடலுறவு குற்றமாகவே பார்க்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது எனவும், மத்திய அரசு கூறியது.

இதை அடுத்து, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறியது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இது குறித்துக் கூறுகையில், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உள்ளது. அரசியல் சாசன சமநிலை என்பது எண்ணிக்கையைக் கொண்டு நிர்ணயிக்கப் படுவதில்லை. ஒருவரின் சுய விருப்பம் மறுக்கப்படுவது மரணத்துக்கு சமமானது. ஓரினச் சேர்க்கை குற்றமல்ல; ஓரினச் சேர்க்கைக்கு எதிரான 377 வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்படுகிறது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories