ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

supreme court of india - 2026

புது தில்லி : ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் அல்ல அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டப் பிரிவு 377 ஐ ரத்து செய்வதாகவும் கூறியுள்ளது. 377வது சட்டப்பிரிவு நீக்கப்படுவதாக 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமித்த கருத்துடன் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.

1861ஆம் ஆண்டு ஓரினச் சேர்க்கை குறித்த சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதனை அப்படியே எடுத்துக் கொண்டு, இந்திய குற்றவியல் சட்டம் 377வது பிரிவில் இதே அம்சம் சேர்க்கப் பட்டது.

அதன்படி, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் என்றும், அதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, மற்றும் அபராதம் விதிக்கலாம். இந்திய குற்றவியல் சட்டம் 377வது பிரிவின் படி, இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த சட்டப் பிரிவை எதிர்த்து ‘நாஸ்’ அறக்கட்டளை தில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் பதிவு செய்தது. தில்லி உயர் நீதிமன்றமும் ‘இந்த சட்டப் பிரிவு சட்டவிரோதமானது’ என கடந்த 2009 ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

இதை அடுத்து, தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, கடந்த 2013 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இந்தத் தடையை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் மறு சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணை செய்யப் பட்டன.

இந்த வழக்கின் விசாரணையின் போது, ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உடல் உறவு கொள்வதை அனுமதிப்பது குறித்து நீதிமன்றத்தின் முடிவை ஏற்பதாகவும், அதே நேரம் ‘இயற்கைக்கு மாறான சிறுவர் – சிறுமியர் மற்றும் விலங்குகளுடன் கொள்ளும் உடலுறவு குற்றமாகவே பார்க்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது எனவும், மத்திய அரசு கூறியது.

இதை அடுத்து, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறியது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இது குறித்துக் கூறுகையில், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உள்ளது. அரசியல் சாசன சமநிலை என்பது எண்ணிக்கையைக் கொண்டு நிர்ணயிக்கப் படுவதில்லை. ஒருவரின் சுய விருப்பம் மறுக்கப்படுவது மரணத்துக்கு சமமானது. ஓரினச் சேர்க்கை குற்றமல்ல; ஓரினச் சேர்க்கைக்கு எதிரான 377 வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்படுகிறது என்றார்.

ALSO READ:  ஐபிஎல் 2026: இதுவரை... புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories