உடையும் கர்நாடக காங்கிரஸ்! ஓரங்கட்டப்பட்ட சித்தராமையாவுக்கு திடீர் மவுசு !

Published:

sidharamaiya in mysore chamundi temple - 2026

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அடுத்த கட்ட பரபரப்பு அரசியல் காட்சி அரங்கேறுகிறது. ஆட்சி அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு திடீரென மவுசு கூடியுள்ளது.

கர்நாடக காங்கிரஸைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் அமைச்சர் ஒருவரும் திடீரென இன்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இதனால், கட்சி இரண்டாகப் பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து, ஹெச்.டி. குமாரசாமியின் தயவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பேரம் பேசப்பட்டது. குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களையே கொண்டிருந்த போதும், அதன்படி குமாரசாமி முதலமைச்சர் ஆகிவிட்டார்.

ஆனால், குமாரசாமிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்ற காரணத்தைச் சொல்லி, ம.ஜனதா தளத்தில் இருந்து தேவேகவுடவை எதிர்த்து கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரஸில் ஐக்கியமாகி, சென்ற முறை முதல்வராகவும் பதவி வகித்த சித்தராமையா, இந்த முறை அதே குமாரசாமி முதல்வராக வர காங்கிரஸின் நெருக்குதலால் பேரம் பேசும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் தனக்கு அரசியலில் முக்கியத்துவம் இல்லாமல் போனது என்று கருதி ஒதுங்கியிருந்தார் சித்தராமையா.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

இந்நிலையில், திடீரென காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் 7 பேரும் ஒரு அமைச்சரும் சித்தராமையாவின் பக்கம் சாய்ந்துள்ளனர். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img