December 5, 2025, 11:43 PM
26.6 C
Chennai

ராகுல் காந்தி போதை மருந்து பயன்படுத்துபவராம்… சொல்பவர் சுவாமி ஆச்சே!

subramanian swami4 - 2025

புது தில்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு மருத்துவ பரிசோதனை செய்தால் அதில் அவர் தோற்றுவிடுவார்… அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரிய வரும். இப்படி ஒரு கருத்தை சிரித்தபடியே கூறிய பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, காங்கிரஸ்காரர்கள் பலரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார்.

பஞ்சாப் மாநிலத்தில் அம்ரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. பாகிஸ்தானை ஒட்டிய மாநிலம் என்பதால், பஞ்சாப் மாநிலத்தில், போதைப் பொருட்கள் கடத்துவதும், விற்பனை செய்வதும் அதிகரித்து வருகிறது என குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.  இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் மற்றும் பரவலைத் தடுக்க பஞ்சாப் மாநில அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, போதைப்  பொருட்களை கடத்துவதில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் வகையிலான சட்டத்துக்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசுக்கு மசோதாவை அனுப்பியுள்ளது.

மேலும், பஞ்சாப் அரசு வெளியிட்ட அறிவிப்பில், பஞ்சாப் அரசு ஊழியர்கள் அனைவரும், ஒவ்வொரு வருடமும் மருத்துவ சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்த சோதனையில் அவர்கள் போதைப் பொருள்களை பயன்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

பஞ்சாப் மாநில அரசின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. அவர் இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், பஞ்சாப் முதல்வர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், இந்த சோதனையில் ராகுல் காந்தியை முதலில் ஈடுபடுத்துவதே சரியானதாக இருக்கும். ராகுல்தான் கொக்கைன்  போதைப் பொருளை பயன்படுத்துகிறார். அவருக்கு மருத்துவ சோதனை செய்தால் போதைப் பொருள் சோதனையில் தோல்வியடைவார். அவர்தான் 70 சதவீதம் பஞ்சாபியர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்று சொன்னவர்… ” எனக் கூறியுள்ளார். அவரின் இந்தக் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories