ராகுல் காந்தி போதை மருந்து பயன்படுத்துபவராம்… சொல்பவர் சுவாமி ஆச்சே!

subramanian swami4 - 2026

புது தில்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு மருத்துவ பரிசோதனை செய்தால் அதில் அவர் தோற்றுவிடுவார்… அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரிய வரும். இப்படி ஒரு கருத்தை சிரித்தபடியே கூறிய பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, காங்கிரஸ்காரர்கள் பலரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார்.

பஞ்சாப் மாநிலத்தில் அம்ரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. பாகிஸ்தானை ஒட்டிய மாநிலம் என்பதால், பஞ்சாப் மாநிலத்தில், போதைப் பொருட்கள் கடத்துவதும், விற்பனை செய்வதும் அதிகரித்து வருகிறது என குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.  இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் மற்றும் பரவலைத் தடுக்க பஞ்சாப் மாநில அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, போதைப்  பொருட்களை கடத்துவதில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் வகையிலான சட்டத்துக்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசுக்கு மசோதாவை அனுப்பியுள்ளது.

மேலும், பஞ்சாப் அரசு வெளியிட்ட அறிவிப்பில், பஞ்சாப் அரசு ஊழியர்கள் அனைவரும், ஒவ்வொரு வருடமும் மருத்துவ சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்த சோதனையில் அவர்கள் போதைப் பொருள்களை பயன்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

பஞ்சாப் மாநில அரசின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. அவர் இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், பஞ்சாப் முதல்வர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், இந்த சோதனையில் ராகுல் காந்தியை முதலில் ஈடுபடுத்துவதே சரியானதாக இருக்கும். ராகுல்தான் கொக்கைன்  போதைப் பொருளை பயன்படுத்துகிறார். அவருக்கு மருத்துவ சோதனை செய்தால் போதைப் பொருள் சோதனையில் தோல்வியடைவார். அவர்தான் 70 சதவீதம் பஞ்சாபியர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்று சொன்னவர்… ” எனக் கூறியுள்ளார். அவரின் இந்தக் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories