7 கோடி போலி கணக்குகளை நீக்கிய டிவிட்டர்! மோடியின் ஃபாலோயர்ஸ் மூன்று லட்சம் ‘அவுட்’ !

twitter - 2026

கடந்த மே, ஜூன் இரு மாதத்தில் மட்டும் சுமார் 7 கோடி போலி கணக்குகளை டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. சில நேரம், ஒரே நாளில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் நீக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைத் தளமான டுவிட்டர் மூலம் பல நாடுகளை சேர்ந்த அரசுகள் மற்றும் அரசியல்வாதிகளை குறிவைத்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ‘ட்ரோல்’, ‘மீம்ஸ்’ என்ற போர்வையில் ஆபாசமாக சித்திரிக்கப் படுவதும் உண்டு. இதுபோன்ற கருத்துகள் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்க அரசை தாக்கும் வகையில் அமைவதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருத்தம் தெரிவித்தனர். இது போல் அண்மையில் இந்தியாவிலும் மோடி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோருக்கு எதிராக மோசமான கருத்து மழை பொழிந்து வந்தார்கள் பலர்.

இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகள், விரும்பத்தகாத கருத்துகளைப் பதிவிடும் நபர்களின் கணக்குகளை முடக்க டுவிட்டர் நிறுவனம் தீர்மானித்தது. இதன்படி தவறான தகவல்களை பரப்பும் கணக்குகளை கண்காணிக்கவும், முடக்கவும் பலர் பணி அமர்த்தப்பட்டார்கள்.

டிவிட்டரில் ஒருவரை ஃபாலோ செய்து, பின்னர் நிறுத்திக் கொண்டவர்களின் கணக்குகளையும், முடக்கப்பட்ட கணக்குகளையும் நீக்கிவிட்டு சரியான எண்ணிக்கையில் ஃபாலோயர்ஸைக் காட்ட முயன்றது. இதனால், பல நாடுகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களும், விஐபி.,க்களும் வெள்ளிக் கிழமை ஒரே நாளில் லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸை இழந்துள்ளனர்.

குறிப்பாக, இந்தியாவில் நம்பர் ஒன் என்ற வகையில் இருந்த பிரதமர் மோடியின் டிவிட்டர் பாலோயர்ஸ் கணக்கில் இன்று ஒரே நாளில் சுமார் 2,84,746 பாலோயர்ஸ் நீக்கப் பட்டனர். மோடிக்கு டிவிட்டரில் 4 கோடியே 34 லட்சம் பாலோயர்ஸ் உள்ளதாக அண்மையில் டிவிட்டர் நிறுவனம் தகவல் வெளியிட்டது.

இது போல், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா சுமார் 4 லட்சம், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் சுமார் 3 லட்சம் ஃபாலோயர்ஸை இழந்துள்ளனர். டுவிட்டர் சமூகத் தளம் 77 லட்சம், ட்விட்டர் சி.இ.ஓ., ஜேக் டார்ஸே 2 லட்சம் ஃபாலோயர்ஸை இழந்துள்ளனர்.

இந்திய அளவில் ஃபாலோயர்ஸ் இழந்தவர்கள்…
ராகுல் காந்தி – சுமார் 17 ஆயிரம்
பிரதமர் மோடி அலுவலக ம் – ஒரு லட்சத்து 40 ஆயிரம்
சசி தரூர் – சுமார் ஒன்றரை லட்சம்
சுஷ்மா சுவராஜ் – சுமார் 74 ஆயிரம்
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் – 91,555
அமித் ஷா – 33,363 ஃபாலோயர்ஸையும் இழந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories