December 5, 2025, 2:51 PM
26.9 C
Chennai

7 கோடி போலி கணக்குகளை நீக்கிய டிவிட்டர்! மோடியின் ஃபாலோயர்ஸ் மூன்று லட்சம் ‘அவுட்’ !

twitter - 2025

கடந்த மே, ஜூன் இரு மாதத்தில் மட்டும் சுமார் 7 கோடி போலி கணக்குகளை டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. சில நேரம், ஒரே நாளில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் நீக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைத் தளமான டுவிட்டர் மூலம் பல நாடுகளை சேர்ந்த அரசுகள் மற்றும் அரசியல்வாதிகளை குறிவைத்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ‘ட்ரோல்’, ‘மீம்ஸ்’ என்ற போர்வையில் ஆபாசமாக சித்திரிக்கப் படுவதும் உண்டு. இதுபோன்ற கருத்துகள் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்க அரசை தாக்கும் வகையில் அமைவதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருத்தம் தெரிவித்தனர். இது போல் அண்மையில் இந்தியாவிலும் மோடி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோருக்கு எதிராக மோசமான கருத்து மழை பொழிந்து வந்தார்கள் பலர்.

இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகள், விரும்பத்தகாத கருத்துகளைப் பதிவிடும் நபர்களின் கணக்குகளை முடக்க டுவிட்டர் நிறுவனம் தீர்மானித்தது. இதன்படி தவறான தகவல்களை பரப்பும் கணக்குகளை கண்காணிக்கவும், முடக்கவும் பலர் பணி அமர்த்தப்பட்டார்கள்.

டிவிட்டரில் ஒருவரை ஃபாலோ செய்து, பின்னர் நிறுத்திக் கொண்டவர்களின் கணக்குகளையும், முடக்கப்பட்ட கணக்குகளையும் நீக்கிவிட்டு சரியான எண்ணிக்கையில் ஃபாலோயர்ஸைக் காட்ட முயன்றது. இதனால், பல நாடுகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களும், விஐபி.,க்களும் வெள்ளிக் கிழமை ஒரே நாளில் லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸை இழந்துள்ளனர்.

குறிப்பாக, இந்தியாவில் நம்பர் ஒன் என்ற வகையில் இருந்த பிரதமர் மோடியின் டிவிட்டர் பாலோயர்ஸ் கணக்கில் இன்று ஒரே நாளில் சுமார் 2,84,746 பாலோயர்ஸ் நீக்கப் பட்டனர். மோடிக்கு டிவிட்டரில் 4 கோடியே 34 லட்சம் பாலோயர்ஸ் உள்ளதாக அண்மையில் டிவிட்டர் நிறுவனம் தகவல் வெளியிட்டது.

இது போல், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா சுமார் 4 லட்சம், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் சுமார் 3 லட்சம் ஃபாலோயர்ஸை இழந்துள்ளனர். டுவிட்டர் சமூகத் தளம் 77 லட்சம், ட்விட்டர் சி.இ.ஓ., ஜேக் டார்ஸே 2 லட்சம் ஃபாலோயர்ஸை இழந்துள்ளனர்.

இந்திய அளவில் ஃபாலோயர்ஸ் இழந்தவர்கள்…
ராகுல் காந்தி – சுமார் 17 ஆயிரம்
பிரதமர் மோடி அலுவலக ம் – ஒரு லட்சத்து 40 ஆயிரம்
சசி தரூர் – சுமார் ஒன்றரை லட்சம்
சுஷ்மா சுவராஜ் – சுமார் 74 ஆயிரம்
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் – 91,555
அமித் ஷா – 33,363 ஃபாலோயர்ஸையும் இழந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories