7 கோடி போலி கணக்குகளை நீக்கிய டிவிட்டர்! மோடியின் ஃபாலோயர்ஸ் மூன்று லட்சம் ‘அவுட்’ !

twitter - 2026

கடந்த மே, ஜூன் இரு மாதத்தில் மட்டும் சுமார் 7 கோடி போலி கணக்குகளை டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. சில நேரம், ஒரே நாளில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் நீக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைத் தளமான டுவிட்டர் மூலம் பல நாடுகளை சேர்ந்த அரசுகள் மற்றும் அரசியல்வாதிகளை குறிவைத்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ‘ட்ரோல்’, ‘மீம்ஸ்’ என்ற போர்வையில் ஆபாசமாக சித்திரிக்கப் படுவதும் உண்டு. இதுபோன்ற கருத்துகள் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்க அரசை தாக்கும் வகையில் அமைவதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருத்தம் தெரிவித்தனர். இது போல் அண்மையில் இந்தியாவிலும் மோடி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோருக்கு எதிராக மோசமான கருத்து மழை பொழிந்து வந்தார்கள் பலர்.

இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகள், விரும்பத்தகாத கருத்துகளைப் பதிவிடும் நபர்களின் கணக்குகளை முடக்க டுவிட்டர் நிறுவனம் தீர்மானித்தது. இதன்படி தவறான தகவல்களை பரப்பும் கணக்குகளை கண்காணிக்கவும், முடக்கவும் பலர் பணி அமர்த்தப்பட்டார்கள்.

டிவிட்டரில் ஒருவரை ஃபாலோ செய்து, பின்னர் நிறுத்திக் கொண்டவர்களின் கணக்குகளையும், முடக்கப்பட்ட கணக்குகளையும் நீக்கிவிட்டு சரியான எண்ணிக்கையில் ஃபாலோயர்ஸைக் காட்ட முயன்றது. இதனால், பல நாடுகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களும், விஐபி.,க்களும் வெள்ளிக் கிழமை ஒரே நாளில் லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸை இழந்துள்ளனர்.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

குறிப்பாக, இந்தியாவில் நம்பர் ஒன் என்ற வகையில் இருந்த பிரதமர் மோடியின் டிவிட்டர் பாலோயர்ஸ் கணக்கில் இன்று ஒரே நாளில் சுமார் 2,84,746 பாலோயர்ஸ் நீக்கப் பட்டனர். மோடிக்கு டிவிட்டரில் 4 கோடியே 34 லட்சம் பாலோயர்ஸ் உள்ளதாக அண்மையில் டிவிட்டர் நிறுவனம் தகவல் வெளியிட்டது.

இது போல், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா சுமார் 4 லட்சம், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் சுமார் 3 லட்சம் ஃபாலோயர்ஸை இழந்துள்ளனர். டுவிட்டர் சமூகத் தளம் 77 லட்சம், ட்விட்டர் சி.இ.ஓ., ஜேக் டார்ஸே 2 லட்சம் ஃபாலோயர்ஸை இழந்துள்ளனர்.

இந்திய அளவில் ஃபாலோயர்ஸ் இழந்தவர்கள்…
ராகுல் காந்தி – சுமார் 17 ஆயிரம்
பிரதமர் மோடி அலுவலக ம் – ஒரு லட்சத்து 40 ஆயிரம்
சசி தரூர் – சுமார் ஒன்றரை லட்சம்
சுஷ்மா சுவராஜ் – சுமார் 74 ஆயிரம்
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் – 91,555
அமித் ஷா – 33,363 ஃபாலோயர்ஸையும் இழந்துள்ளனர்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories