2019 தேர்தல் வியூகம்: மீண்டும் பாஜக.,வை நெருங்கும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்

prashant kishor - 2026

புது தில்லி: தேர்தல் ஆலோசகர், வியூக நிபுணர், வெற்றிக்கான சூத்திரதாரர் என்றெல்லாம் கூறப்படும் பிரசாந்த் கிஷோர், 2019 தேர்தலுக்காக இப்போது மீண்டும் பாஜக., பக்கம் நெருங்கி வருவதாகக் கூறப் படுகிறது.

தேர்தல் வியூகங்களை வகுத்து வெற்றிகரமான முடிவுகளுக்காக பெயர் பெற்ற நிபுணர் பிரசாந்த் கிஷோர். இவர், தனது ஸ்ட்ராடஜிக் திட்டமிடல் நிறுவனம் மூலம் அரசியல் கட்சிகள், தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில் திட்டங்களை வகுத்துக் கொடுப்பார். மேலும் பிரசாரத்தை ஒருங்கிணைப்பதில் வல்லவர் என பெயர் பெற்றவர்.

கடந்த 2012ஆம் ஆண்டு குஜராத் சட்டசபைத் தேர்தலிலும், அடுத்து வந்த 2014 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் பாஜக.,வுடன் கை கோத்து பணி செய்தார். அப்போது, நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க, ஆட்சியைப் பிடிக்க கிஷோர் திட்டங்களை வகுத்துக் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் பாஜக.,வில் பெரும் பதவியை எதிர்பார்த்தார் கிஷோர். அது, அமித் ஷாவுக்குப் பிடிக்கவில்லை. இதனால் கிஷோருக்கும் அமித் ஷாவுக்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால் அமித் ஷாவை விட்டுப் பிரிந்த கிஷோர், பின்னர் பீஹார் சட்டசபைத் தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ரா.ஜ.த இன்னும் சில கட்சிகளை இணைத்து ஏற்பட்ட மெகா கூட்டணிக்காக பணியாற்றி வெற்றியை தேடிக் கொடுத்தார்.

அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸுக்காக பணியாற்றினார். ஆனால் உ.பி. தேர்தலின் போது இவரது திட்டமிடல் செயல்படவில்லை. அதற்குக் காரணமாக, காங்கிரஸ் தலைவர்களிடையே ஒற்றுமை, ஒருங்கிணைப்பு இல்லை என்று கூறினார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பாஜக.,வின் மூத்த நிர்வாகிகள் மூலம் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரை சுமார் 20 முறை கிஷோர் சந்தித்ததாகவும், 2019 பொதுத் தேர்தலை சந்திக்க தயாராவதற்கான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து நீண்ட ஆலோசனைகளை நடத்தியதாகவும் பாஜக., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் மீண்டும் கிஷோர், மோடி, அமித் ஷா மூவரின் கூட்டணியில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை பாஜக., சந்திக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories