2019 தேர்தல் வியூகம்: மீண்டும் பாஜக.,வை நெருங்கும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்

prashant kishor - 2026

புது தில்லி: தேர்தல் ஆலோசகர், வியூக நிபுணர், வெற்றிக்கான சூத்திரதாரர் என்றெல்லாம் கூறப்படும் பிரசாந்த் கிஷோர், 2019 தேர்தலுக்காக இப்போது மீண்டும் பாஜக., பக்கம் நெருங்கி வருவதாகக் கூறப் படுகிறது.

தேர்தல் வியூகங்களை வகுத்து வெற்றிகரமான முடிவுகளுக்காக பெயர் பெற்ற நிபுணர் பிரசாந்த் கிஷோர். இவர், தனது ஸ்ட்ராடஜிக் திட்டமிடல் நிறுவனம் மூலம் அரசியல் கட்சிகள், தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில் திட்டங்களை வகுத்துக் கொடுப்பார். மேலும் பிரசாரத்தை ஒருங்கிணைப்பதில் வல்லவர் என பெயர் பெற்றவர்.

கடந்த 2012ஆம் ஆண்டு குஜராத் சட்டசபைத் தேர்தலிலும், அடுத்து வந்த 2014 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் பாஜக.,வுடன் கை கோத்து பணி செய்தார். அப்போது, நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க, ஆட்சியைப் பிடிக்க கிஷோர் திட்டங்களை வகுத்துக் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் பாஜக.,வில் பெரும் பதவியை எதிர்பார்த்தார் கிஷோர். அது, அமித் ஷாவுக்குப் பிடிக்கவில்லை. இதனால் கிஷோருக்கும் அமித் ஷாவுக்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால் அமித் ஷாவை விட்டுப் பிரிந்த கிஷோர், பின்னர் பீஹார் சட்டசபைத் தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ரா.ஜ.த இன்னும் சில கட்சிகளை இணைத்து ஏற்பட்ட மெகா கூட்டணிக்காக பணியாற்றி வெற்றியை தேடிக் கொடுத்தார்.

அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸுக்காக பணியாற்றினார். ஆனால் உ.பி. தேர்தலின் போது இவரது திட்டமிடல் செயல்படவில்லை. அதற்குக் காரணமாக, காங்கிரஸ் தலைவர்களிடையே ஒற்றுமை, ஒருங்கிணைப்பு இல்லை என்று கூறினார்.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பாஜக.,வின் மூத்த நிர்வாகிகள் மூலம் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரை சுமார் 20 முறை கிஷோர் சந்தித்ததாகவும், 2019 பொதுத் தேர்தலை சந்திக்க தயாராவதற்கான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து நீண்ட ஆலோசனைகளை நடத்தியதாகவும் பாஜக., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் மீண்டும் கிஷோர், மோடி, அமித் ஷா மூவரின் கூட்டணியில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை பாஜக., சந்திக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories