February 22, 2026, 3:19 AM
25.6 C
Chennai

திருப்பதியில் கும்பாபிஷேகத்தை சாக்காக வைத்து ‘புதையல் கொள்ளை’ திட்டம்? எதிர்ப்பை அடுத்து தரிசனத்துக்கு அனுமதி!

08 June24 Tirupathi - 2026

திருப்பதி: திருமலை திருப்பதியில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 6 நாட்களுக்கு பக்கதர்கள் பெருமாள் தரிசனத்துக்கு கோவிலுக்குள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தேவஸ்தானம் அந்த முடிவை திரும்பப் பெற்றது.

திருமலை திருப்பதி வேங்கடாசலபதி கோவில் மஹாசம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு கோவிலை சுத்தம் செய்வதற்காக வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் 6 நாட்களுக்கு கோவில் முழுமையாக மூடப்படும் என்றும், பக்தர்கள் எவருக்கும் உள்ளே அனுமதி கிடையாது என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.

tirupathi archaka - 2026

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படுவதில் மர்மம் இருப்பதாக திருப்பதி ஆலய பிரதான அர்ச்சகராக இருந்த ரமண தீட்சிதலு குற்றம் சாட்டினார். சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், குடமுழுக்கு நடத்துவதற்காக கோவில் மூடப்படும் என்று அறிவித்திருப்பது, இந்நாட்களில் சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது ஆகியவை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

திருப்பதி ஆலய நகைகள் மாயமான விவகாரம் மற்றும் கோயிலில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை கோரி தாங்கள் கேட்டிருப்பதால், தடயங்களை அழிப்பதற்கான முயற்சியில் தேவஸ்தானம் ஈடுபடுவதாக பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது என்று கூறினார்.

ஆனால், தேவஸ்தான நிர்வாகிகளோ, திருப்பதி கோவில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற போது வருகை தந்த பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது என்றும், ஆனால் தற்போது #தினசரி சுமார் ஒரு லட்சம் பேர் தரிசனத்துக்காக வருவதாகவும், எனவே கும்பாபிஷேக விழாவின் போது அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை சமாளிப்பது கடினமாக இருக்கும் என்பதாலேயே அனுமதி மறுக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தனர்.

திருப்பதி ஆலய வரலாற்றில் முதல் முறையாக கோவில் முழுவதும் மூடப்படும் என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தேவஸ்தானத்தை வற்புறுத்தினார். இதை அடுத்து தனது அறிவிப்பை திருமலை திருப்பதி தேவஸ்தானம் திரும்பப் பெற்றது. அதன்படி, ஆகஸ்ட் 11,12 தேதிகளில் சிறுசிறு குழுக்களாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று கூறியுள்ளது. இருப்பினும், தேவஸ்தானத்தின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியதாகவே இருப்பதாக பக்தர்கள் புகார் கூறி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories