December 5, 2025, 12:38 PM
26.9 C
Chennai

திருப்பதியில் கும்பாபிஷேகத்தை சாக்காக வைத்து ‘புதையல் கொள்ளை’ திட்டம்? எதிர்ப்பை அடுத்து தரிசனத்துக்கு அனுமதி!

08 June24 Tirupathi - 2025

திருப்பதி: திருமலை திருப்பதியில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 6 நாட்களுக்கு பக்கதர்கள் பெருமாள் தரிசனத்துக்கு கோவிலுக்குள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தேவஸ்தானம் அந்த முடிவை திரும்பப் பெற்றது.

திருமலை திருப்பதி வேங்கடாசலபதி கோவில் மஹாசம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு கோவிலை சுத்தம் செய்வதற்காக வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் 6 நாட்களுக்கு கோவில் முழுமையாக மூடப்படும் என்றும், பக்தர்கள் எவருக்கும் உள்ளே அனுமதி கிடையாது என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.

tirupathi archaka - 2025

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படுவதில் மர்மம் இருப்பதாக திருப்பதி ஆலய பிரதான அர்ச்சகராக இருந்த ரமண தீட்சிதலு குற்றம் சாட்டினார். சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், குடமுழுக்கு நடத்துவதற்காக கோவில் மூடப்படும் என்று அறிவித்திருப்பது, இந்நாட்களில் சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது ஆகியவை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

திருப்பதி ஆலய நகைகள் மாயமான விவகாரம் மற்றும் கோயிலில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை கோரி தாங்கள் கேட்டிருப்பதால், தடயங்களை அழிப்பதற்கான முயற்சியில் தேவஸ்தானம் ஈடுபடுவதாக பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது என்று கூறினார்.

ஆனால், தேவஸ்தான நிர்வாகிகளோ, திருப்பதி கோவில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற போது வருகை தந்த பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது என்றும், ஆனால் தற்போது #தினசரி சுமார் ஒரு லட்சம் பேர் தரிசனத்துக்காக வருவதாகவும், எனவே கும்பாபிஷேக விழாவின் போது அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை சமாளிப்பது கடினமாக இருக்கும் என்பதாலேயே அனுமதி மறுக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தனர்.

திருப்பதி ஆலய வரலாற்றில் முதல் முறையாக கோவில் முழுவதும் மூடப்படும் என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தேவஸ்தானத்தை வற்புறுத்தினார். இதை அடுத்து தனது அறிவிப்பை திருமலை திருப்பதி தேவஸ்தானம் திரும்பப் பெற்றது. அதன்படி, ஆகஸ்ட் 11,12 தேதிகளில் சிறுசிறு குழுக்களாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று கூறியுள்ளது. இருப்பினும், தேவஸ்தானத்தின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியதாகவே இருப்பதாக பக்தர்கள் புகார் கூறி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories