அரை மணி நேரம் பாதுகாப்பு இன்றி நின்றிருந்த ராகுல்: உளவுப் பிரிவு விசாரணை

rahulgandhi1 - 2026

சென்னை: மறைந்த திமுக. ,தலைவர் கருணாநிதி இறுதி அஞ்சலி நிகழ்வில் 30 நிமிடம் பாதுகாப்பு இல்லாமல் ராகுல் காந்தி இருந்ததாகக் கூறப்பட்டது குறித்து மத்திய உளவுப்பிரிவு விசாரணை மேற்கொண்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்திக்கு 30 நிமிடம் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி நேற்று பிற்பகல் சென்னை வந்தார்.

ராகுல்காந்தி வந்த நேரத்தில் திமுக தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர்கள் போலீஸாரின் கட்டுப்பாடுகளை மீறி கருணாநிதியின் உடல் வைக்கப் பட்டிருந்த இடம் வரைக்கும் வந்து சூழ்ந்து கொண்டனர். முக்கியப் பிரமுகர்கள் வரும் பகுதியிலும் தொண்டர்கள் ஆக்கிரமித்து விட்டனர். அவர்களைக் கட்டுப்படுத்த சென்னை போலீஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

அந்நேரத்தில் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியாக ராகுல் காந்தியும் வந்தார். அவரை ஓர் இடத்தில் அமர வைத்து விட்டு போலீஸார் சென்று விட்டனர். சிறிது நேரம் அமர்ந்திருந்த ராகுல், பின்னர் எழுந்து அங்கிருந்த பகுதிகளை சுற்றிப் பார்க்க ஆரம்பித்தார். தொண்டர்களைக் கட்டுப்படுத்தும் முனைப்பில் இருந்த போலீஸார் ராகுலை மறந்து விட்டனர். இதனால் சுமார் 30 நிமிட நேரம் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் இருந்துள்ளார் ராகுல்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

இந்நிலையில், இதுகுறித்து விவரம் அறிந்த மத்திய உளவுப் பிரிவு போலீஸார், உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். இதுகுறித்து விசாரிக்கப் படும் என தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories