December 5, 2025, 7:03 PM
26.7 C
Chennai

கேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்!

government engineering college barton hill trivandrum kerala - 2025

திருவனந்தபுரம்: அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய, ‘எமர்ஜென்சி பவர் பேங்க்’ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தற்போதைய உடனடி தேவை, தகவல் தொடர்பு வசதி. ஆனால், வெள்ளத்தால் வீடுகள் சூழப்பட்டுள்ளதால், மின்சாரம் துண்டிக்கப் பட்டு, வீடுகளில் வசிக்கும் மக்களின் மொபைல் போன்கள், ‘சார்ஜ்’ இல்லாமல் செயல் இழந்து விட்டன.

powerbank kerala flood - 2025

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் படிக்கும் மெக்கானிக்கல் மாணவர்கள், ‘இன்ஸ்பையர்’ என்ற பெயரில் நடத்தி வரும் குழு மூலம் எமர்ஜென்சி பவர் பேங்க் தயாரித்து, விநியோகித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை, இந்த பவர் பேங்குகளை ஹெலிகாப்டர்களில் இருந்து பாதிக்கப் பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள் வீசியுள்ளனர். அவற்றை மக்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். மிகவும் சிரமமான சூழலில், இது மிகப் பெரும் உதவியாக உள்ளது என மக்கள் கூறியுள்ளனர்.

முதலாண்டு பயிலும் பொறியியல் மாணவர் ஆதித்யா எஸ்.குமார் இது குறித்துக் குறிப்பிட்ட போது, இது எட்டு ஏஏ பேட்டரிகளால் உருவாக்கப் படும். இரு காட்ரெட்ஜ்களாக பிரித்து, ஒவ்வொன்றிலும் நான்கு நான்கு ஏஏ பேட்டரிகளை இணைத்து, பின் இரு காட்ரிட்ஜ்களையும் இணைத்து கவர் செய்து, சார்ஜ் பின்னுடன் சேர்த்து தயாரித்து விடுகிறோம்.

power bank inspire - 2025

இதன் மூலம் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்ய முடியும். 10-15 சதவீதம் அதில் சார்ஜ் ஏறும். அது சுமார் 1 மணி நேரத்துக்கு தாக்குப் பிடிக்கும். அதற்குள் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் தகவல்களை பரிமாறிக் கொள்ள இயலும். இதனை இந்த அவசர காலத்துக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து பயன்படுத்த எண்ணினால் அது செல்போனை பாதிக்கக் கூடும் என்று எச்சரித்தார்.

பொறியியல் மாணவர்கள் குழுக்களாக இணைந்து 300 பவர் பேங்க்களை அரசுக்கு ஒப்படைத்தனர். அவை நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இருப்பினும், கேட்ரிட்ஜ் தட்டுப்பாட்டால், அதிக அளவிலான பவர் பேங்குகளை தயாரிக்க முடியவில்லை என்று மாணவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories