கேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்!

government engineering college barton hill trivandrum kerala - 2026

திருவனந்தபுரம்: அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய, ‘எமர்ஜென்சி பவர் பேங்க்’ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தற்போதைய உடனடி தேவை, தகவல் தொடர்பு வசதி. ஆனால், வெள்ளத்தால் வீடுகள் சூழப்பட்டுள்ளதால், மின்சாரம் துண்டிக்கப் பட்டு, வீடுகளில் வசிக்கும் மக்களின் மொபைல் போன்கள், ‘சார்ஜ்’ இல்லாமல் செயல் இழந்து விட்டன.

powerbank kerala flood - 2026

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் படிக்கும் மெக்கானிக்கல் மாணவர்கள், ‘இன்ஸ்பையர்’ என்ற பெயரில் நடத்தி வரும் குழு மூலம் எமர்ஜென்சி பவர் பேங்க் தயாரித்து, விநியோகித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை, இந்த பவர் பேங்குகளை ஹெலிகாப்டர்களில் இருந்து பாதிக்கப் பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள் வீசியுள்ளனர். அவற்றை மக்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். மிகவும் சிரமமான சூழலில், இது மிகப் பெரும் உதவியாக உள்ளது என மக்கள் கூறியுள்ளனர்.

முதலாண்டு பயிலும் பொறியியல் மாணவர் ஆதித்யா எஸ்.குமார் இது குறித்துக் குறிப்பிட்ட போது, இது எட்டு ஏஏ பேட்டரிகளால் உருவாக்கப் படும். இரு காட்ரெட்ஜ்களாக பிரித்து, ஒவ்வொன்றிலும் நான்கு நான்கு ஏஏ பேட்டரிகளை இணைத்து, பின் இரு காட்ரிட்ஜ்களையும் இணைத்து கவர் செய்து, சார்ஜ் பின்னுடன் சேர்த்து தயாரித்து விடுகிறோம்.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

power bank inspire - 2026

இதன் மூலம் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்ய முடியும். 10-15 சதவீதம் அதில் சார்ஜ் ஏறும். அது சுமார் 1 மணி நேரத்துக்கு தாக்குப் பிடிக்கும். அதற்குள் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் தகவல்களை பரிமாறிக் கொள்ள இயலும். இதனை இந்த அவசர காலத்துக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து பயன்படுத்த எண்ணினால் அது செல்போனை பாதிக்கக் கூடும் என்று எச்சரித்தார்.

பொறியியல் மாணவர்கள் குழுக்களாக இணைந்து 300 பவர் பேங்க்களை அரசுக்கு ஒப்படைத்தனர். அவை நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இருப்பினும், கேட்ரிட்ஜ் தட்டுப்பாட்டால், அதிக அளவிலான பவர் பேங்குகளை தயாரிக்க முடியவில்லை என்று மாணவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories