சாலைப் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க… தில்லி மெட்ரோ ரயிலில் மோடி பயணம்!

modi in metro - 2026

புது தில்லி : தில்லியில் நடைபெற்ற இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மைய திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, தவுலா கவுன் பகுதியில் இருந்து துவாரகாவிற்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.

மொத்தம் 14 நிமிடங்கள் தில்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த மோடி, ரயிலில் பயணித்த சக பயணிகளுடன் கலந்துரையாடினார்.

முதலில் பிரதமர் மெட்ரோ ரயிலில் பயணிக்க வந்ததைக் கண்டு ஆச்சரியப் பட்ட பயணிகள், அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். சக பயணிகளுடன் பிரதமர் மோடியும் சிரித்து பேசியபடி பயணித்தார்.

தில்லியில் விவிஐபி.,க்கள் பயணிக்கும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவே பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விழாவில் கலந்து கொள்ள பகல் 3.13 முதல் 3.27 வரை மோடி மெட்ரோ ரயிலில் பயணித்தார். பின்னர் விழா முடிந்து திரும்பும் போதும் துவாரகாவில் இருந்து தவுலா கவுன் மெட்ரோ நிலையத்திற்கு 4.39 மணி முதல் 4.54 மணி வரை மோடி பயணம் செய்தார்.

இதனைத் தன் டிவிட்டர் பக்கத்திலும் மோடி பகிர்ந்தார். அந்தப் பதிவு:

அதுபோல், போக்குவரத்து விதிகளை மதித்து கடைப்பிடிப்பதில் மோடி முன்னுதாரணத்துடன் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு உலாவருகிறது. ராகுல், ஸ்டாலின் உள்ளிட்டோர் காரில் பயணம் செய்யும் போது சீட் பெல்ட் அணியாமல் செல்லும் படங்களும், மோடி சீட் பெல்ட் அணிந்து முன்னுதாரணத்துடன் செல்லும் படங்களும் இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

Seat belt in car - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories