ரத்த தானத்தின் தமிழகம் முன்னோடி மாநிலம்: முதல்வர் எடப்பாடி பெருமிதம்!

Published:

edappadi palanisamy1 - 2026

சென்னை: தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தை ஒட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ரத்த தானம் மனித உயிரை காப்பாற்றும் புனிதமான செயல்! தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கமும், குருதி பரிமாற்றுக் குழுமமும் இணைந்து ரத்த தான முகாம்களையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றன. ஓர் ஆண்டில் 4 முறை ரத்த தானம் செய்த ஆண்கள், 3 முறை ரத்த தானம் செய்த பெண்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு 99 விழுக்காடு ரத்தம் தன்னார்வக் கொடையாளர்கள் மூலம் பெறப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் அதை 100 சதவீதமாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img