அருணாச்சல் அரசியல் நிலவரம்: குடியரசுத் தலைவர் தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்

புது தில்லி,

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஆளுநர் எடுத்துள்ள முடிவுகளில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து வலியுறுத்தினர்.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நபம் துகி, முதல்வராக உள்ளார். மாநில ஆளுநரான ஜோதி பிரசாத், மாநில அரசையோ அல்லது முதலமைச்சரையோ கலந்து ஆலோசிக்காமல், சட்டசபை கூட்டத் தொடருக்கு தன்னிச்சையாக அறிவிப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அந்த கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலை தானே முடிவு செய்துள்ள ஆளுநர், சபை நடவடிக்கைகளுக்கு சபாநாயகர் தலைமையேற்க மாட்டார் என முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆளுநரின் இந்த தன்னிச்சையான நடவடிக்கை காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை அடுத்து, அரசை கவிழ்க்க சதி நடப்பதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று பிற்பகலில் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றனர். அங்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்த அவர்கள், அருணாச்சல பிரதேசத்தில் ஆளுநர் மூலம், மாநில அரசை கவிழ்க்க மத்திய பா.ஜனதா அரசு முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினர். அதனால் ஆளுநரின் இந்த முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories