மீண்டும் அய்யாக்கண்ணு! தில்லியில் ரயில் மறியல் போராட்டம்; தமிழக விவசாயிகள் பேரணி!

ayyakkannu1 - 2026

புது தில்லி: தில்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் 300க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்திய தேசிய விவசாயிகள் ஆணையத் தலைவர் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவோம் என பாஜக தேர்தலின்போது சொன்னது. ஆனால், நெல், கரும்பு உள்ளிட்ட விளைபொருட்களுக்கு மிகக் குறைவான விலையை மட்டுமே நிகழாண்டு நிர்ணயித்துள்ளது.

எனவே, நெல், கரும்பு, பருத்தி, பருப்பு வகைகளின் விலையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து புதிய விலை அறிவிப்பை வெளியிட வேண்டும். விவசாயிகளின் கடன் பளுவைக் குறைத்து தற்கொலைகளைத் தடுக்க மோடி அரசு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், விவசாய விரோத செயலை கண்டித்தும் நவம்பர் 30ஆம் தேதி பேரணியும், நாடாளுமன்றம் முன் நெல் கொட்டும் போராட்டமும் நடைபெறுகிறது.

இந்நிலையில் இப்போராட்டத்தில் பங்கேற்பதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் இருந்து ஏராளமான விவசாயிகள் தில்லி புறப்பட்டுச் சென்றனர். தில்லி சென்ற அவர்கள் இந்தூர் ரயில் நிலையத்தில் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ரயில் மறியலில் ஈடுபட்டதுடன் கழுத்தில் மண்டை ஓடுகளை தொங்க விட்டு வழக்கம் போல் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து விவசாயிகள் தில்லி ராம்லீலா மைதானம் வரை ஊர்வலமாகவும் சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories