சபரிமலை பாரம்பரியம் தகர்ப்பு! கேரள போலீஸார் உதவியுடன் சபரிமலையில் நுழைந்த இரு பெண்கள்!

sabarimala women entered - 2026

கேரள போலீசாரின் உதவியுடன் இன்று காலை சபரிமலை ஆலயத்தில் இரண்டு மாவோயிஸ்டு பெண்கள் நுழைந்ததாக செய்திகள் வெளியாகின. உலகத்தின் கவனத்தை திசைதிருப்ப பெண்கள் சுவர் உருவாக்கப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சபரிமலை மரபுகளை உடைக்க அரசு மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாக கூறப் படுகிறது.

இன்று காலை முதல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சபரிமலை விவகாரத்தில் இந்து மத அமைப்புகள் மற்றும் பாஜக., ஆகியவற்றின் எதிர்ப்புக்கு இடையில், மார்க்சிஸ்ட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சபரிமலைக்குச் சென்றதாக செய்திகள் வெளியாகின.

சபரிமலைக்கு இன்று அதிகாலை 3.45 மணி அளவில் சபரிமலைக்கு வந்தனர். சபரிமலை பாதுகாப்பு கம்யூனிஸ்ட் மாஃபியாக்கள் மற்றும் போலீஸாரின் பாதுகாப்பின் கீழ் இருந்தது. அவர்கள் பதினெட்டாம் படிகளில் ஏறாமல் அதனைத் தவிர்த்து, பக்கவாட்டு வழியில் சன்னிதானத்துக்கு வந்ததாகக் கூறப் படுகிறது. அவர்கள் இருவரும் தங்கள் முகங்களை மூடிக்கொண்டு வந்தனர் என்றும், சபரிமலையில், காலை சுமார் மூன்று மணிக்கெல்லாம் அவர்கள் வந்தார்கள் என்றும் கூறப் படுகிறது.

அவர்கள் தரிசனத்துக்காக போலீஸார் மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தனர்! இந்தச் சம்பவத்தை போலீஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், இந்தச் செய்தியை ஊடகங்கள் முதலில் வெளியிட்டன.

சபரிமலை பாதுகாபில் உள்ள கேரள போலீஸார் முன்னதாக, தங்களால் சபரிமலைக்கு இனி பெண்கள் வந்தால் பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறி, விவகாரத்தை திசைதிருப்பியிருந்தனர். மேலும், சபரிமலை விவகாரத்தையும் மகளிர் சுவர் விவகாரத்தில் கவனம் வைக்க வைத்து, திசை திருப்பியிருந்தனர்.

இந்த இடைப்பட்ட நேரத்தில், மலப்புரத்தில் வசித்து வரும் பிந்து மற்றும் கனகதுர்கா இருவரும் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சபரிமலை சந்நிதிதானத்தில் புகுவதற்காக அரசால் வரவழைக்கப்பட்டனர். ஆனால் ஐயப்ப பக்தர்களின் எதிர்ப்புக்கு இடையில் சந்நிதானத்துக்கு வர இயலவில்லை. இந்த நிலையில் பெண்கள் இருவரும் இன்று சபரிமலைக்கு அழைத்துவரப் பட்டதாக செய்திகள் வெளியாகின.

இதனால், சபரிமலை தூய்மைப் படுத்தும் பணிகள் நடைபெறும் என்றும், தந்திரி, பந்தளம் மன்னர் குடும்பம் ஆகியவை இனி சபரிமலை விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கக் கூடும் என்றும் கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories