December 6, 2025, 7:27 PM
26.8 C
Chennai

சபரிமலை பாரம்பரியம் தகர்ப்பு! கேரள போலீஸார் உதவியுடன் சபரிமலையில் நுழைந்த இரு பெண்கள்!

sabarimala women entered - 2025

கேரள போலீசாரின் உதவியுடன் இன்று காலை சபரிமலை ஆலயத்தில் இரண்டு மாவோயிஸ்டு பெண்கள் நுழைந்ததாக செய்திகள் வெளியாகின. உலகத்தின் கவனத்தை திசைதிருப்ப பெண்கள் சுவர் உருவாக்கப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சபரிமலை மரபுகளை உடைக்க அரசு மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாக கூறப் படுகிறது.

இன்று காலை முதல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சபரிமலை விவகாரத்தில் இந்து மத அமைப்புகள் மற்றும் பாஜக., ஆகியவற்றின் எதிர்ப்புக்கு இடையில், மார்க்சிஸ்ட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சபரிமலைக்குச் சென்றதாக செய்திகள் வெளியாகின.

சபரிமலைக்கு இன்று அதிகாலை 3.45 மணி அளவில் சபரிமலைக்கு வந்தனர். சபரிமலை பாதுகாப்பு கம்யூனிஸ்ட் மாஃபியாக்கள் மற்றும் போலீஸாரின் பாதுகாப்பின் கீழ் இருந்தது. அவர்கள் பதினெட்டாம் படிகளில் ஏறாமல் அதனைத் தவிர்த்து, பக்கவாட்டு வழியில் சன்னிதானத்துக்கு வந்ததாகக் கூறப் படுகிறது. அவர்கள் இருவரும் தங்கள் முகங்களை மூடிக்கொண்டு வந்தனர் என்றும், சபரிமலையில், காலை சுமார் மூன்று மணிக்கெல்லாம் அவர்கள் வந்தார்கள் என்றும் கூறப் படுகிறது.

அவர்கள் தரிசனத்துக்காக போலீஸார் மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தனர்! இந்தச் சம்பவத்தை போலீஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், இந்தச் செய்தியை ஊடகங்கள் முதலில் வெளியிட்டன.

சபரிமலை பாதுகாபில் உள்ள கேரள போலீஸார் முன்னதாக, தங்களால் சபரிமலைக்கு இனி பெண்கள் வந்தால் பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறி, விவகாரத்தை திசைதிருப்பியிருந்தனர். மேலும், சபரிமலை விவகாரத்தையும் மகளிர் சுவர் விவகாரத்தில் கவனம் வைக்க வைத்து, திசை திருப்பியிருந்தனர்.

இந்த இடைப்பட்ட நேரத்தில், மலப்புரத்தில் வசித்து வரும் பிந்து மற்றும் கனகதுர்கா இருவரும் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சபரிமலை சந்நிதிதானத்தில் புகுவதற்காக அரசால் வரவழைக்கப்பட்டனர். ஆனால் ஐயப்ப பக்தர்களின் எதிர்ப்புக்கு இடையில் சந்நிதானத்துக்கு வர இயலவில்லை. இந்த நிலையில் பெண்கள் இருவரும் இன்று சபரிமலைக்கு அழைத்துவரப் பட்டதாக செய்திகள் வெளியாகின.

இதனால், சபரிமலை தூய்மைப் படுத்தும் பணிகள் நடைபெறும் என்றும், தந்திரி, பந்தளம் மன்னர் குடும்பம் ஆகியவை இனி சபரிமலை விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கக் கூடும் என்றும் கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories