சபரிமலை பாரம்பரியம் தகர்ப்பு! கேரள போலீஸார் உதவியுடன் சபரிமலையில் நுழைந்த இரு பெண்கள்!

sabarimala women entered - 2026

கேரள போலீசாரின் உதவியுடன் இன்று காலை சபரிமலை ஆலயத்தில் இரண்டு மாவோயிஸ்டு பெண்கள் நுழைந்ததாக செய்திகள் வெளியாகின. உலகத்தின் கவனத்தை திசைதிருப்ப பெண்கள் சுவர் உருவாக்கப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சபரிமலை மரபுகளை உடைக்க அரசு மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாக கூறப் படுகிறது.

இன்று காலை முதல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சபரிமலை விவகாரத்தில் இந்து மத அமைப்புகள் மற்றும் பாஜக., ஆகியவற்றின் எதிர்ப்புக்கு இடையில், மார்க்சிஸ்ட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சபரிமலைக்குச் சென்றதாக செய்திகள் வெளியாகின.

சபரிமலைக்கு இன்று அதிகாலை 3.45 மணி அளவில் சபரிமலைக்கு வந்தனர். சபரிமலை பாதுகாப்பு கம்யூனிஸ்ட் மாஃபியாக்கள் மற்றும் போலீஸாரின் பாதுகாப்பின் கீழ் இருந்தது. அவர்கள் பதினெட்டாம் படிகளில் ஏறாமல் அதனைத் தவிர்த்து, பக்கவாட்டு வழியில் சன்னிதானத்துக்கு வந்ததாகக் கூறப் படுகிறது. அவர்கள் இருவரும் தங்கள் முகங்களை மூடிக்கொண்டு வந்தனர் என்றும், சபரிமலையில், காலை சுமார் மூன்று மணிக்கெல்லாம் அவர்கள் வந்தார்கள் என்றும் கூறப் படுகிறது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

அவர்கள் தரிசனத்துக்காக போலீஸார் மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தனர்! இந்தச் சம்பவத்தை போலீஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், இந்தச் செய்தியை ஊடகங்கள் முதலில் வெளியிட்டன.

சபரிமலை பாதுகாபில் உள்ள கேரள போலீஸார் முன்னதாக, தங்களால் சபரிமலைக்கு இனி பெண்கள் வந்தால் பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறி, விவகாரத்தை திசைதிருப்பியிருந்தனர். மேலும், சபரிமலை விவகாரத்தையும் மகளிர் சுவர் விவகாரத்தில் கவனம் வைக்க வைத்து, திசை திருப்பியிருந்தனர்.

இந்த இடைப்பட்ட நேரத்தில், மலப்புரத்தில் வசித்து வரும் பிந்து மற்றும் கனகதுர்கா இருவரும் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சபரிமலை சந்நிதிதானத்தில் புகுவதற்காக அரசால் வரவழைக்கப்பட்டனர். ஆனால் ஐயப்ப பக்தர்களின் எதிர்ப்புக்கு இடையில் சந்நிதானத்துக்கு வர இயலவில்லை. இந்த நிலையில் பெண்கள் இருவரும் இன்று சபரிமலைக்கு அழைத்துவரப் பட்டதாக செய்திகள் வெளியாகின.

இதனால், சபரிமலை தூய்மைப் படுத்தும் பணிகள் நடைபெறும் என்றும், தந்திரி, பந்தளம் மன்னர் குடும்பம் ஆகியவை இனி சபரிமலை விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கக் கூடும் என்றும் கூறப் படுகிறது.

ALSO READ:  ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories