புண்யாஜனத்துக்காக சபரிமலை நடை அடைப்பு! எப்போது மீண்டும் திறப்பு?

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

sabarimala sannidhi closed tilljan12 - 2026

பாரம்பரியமிக்க சபரிமலையில் இன்று காலை இரு பெண்கள் போலீசார் உதவியுடன் நுழைந்தனர். அவர்கள் பதினெட்டுப் படிகளில் ஏற வில்லை என்று அவர்கள் கூறினர். விஐபிக்கள் செல்லும் பக்கவாட்டு படிகளில் ஏறி சபரிமலை சன்னதி முன் தரிசனத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

சபரிமலை பாரம்பரியம் தகர்க்கப்பட்டதால் பக்தர்கள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர் ஏற்கெனவே சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்டால் தாங்கள் நடையை அடைத்து சுத்தி பூஜை செய்வோம் என்றும் சபரிமலை சந்நிதியே முழுதும் அடைக்கப்படும் என்றும் தந்திரிகளும் பந்தள ராஜ குடும்பமும் தெரிவித்திருந்தது

அதன்படி இன்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை காண வரிசையில் நின்று வந்து கொண்டிருந்த நிலையில் இரு பெண்கள் நுழைந்ததால் சபரிமலை நடை அடைக்கப்பட்டது. மீண்டும் ஜனவரி மாதம் 12ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் முன்னதாகவே பதிவு செய்து, ஏற்பாடுகளைச் செய்து வந்த பக்தர்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Related articles

Recent articles

spot_img