வானொலி வாயிலாக நாட்டு மக்களுடன் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலமாக உரை நிகழ்த்தும் பிரதமர் நரேந்திர மோடியின் 16-வது வானொலி உரை இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பானது.
இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, “காதி” தற்போதைய அளவில் நமது தேசிய சின்னமாக மாறியுள்ளது. இதன்மூலம், கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. காதி பொருட்களிலேயே, நமது சுதந்திரம் அடங்கியுள்ளதாக சர்தார் வல்லபாய் படேல் கூறியுள்ளார். ஹரியானாவில், பெண் குழந்தைகளை காக்க புதிய திட்டம் கொண்டுவந்துள்ளதற்கு அம்மாநில அரசிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்


