ரஞ்சியில் கூட ஸ்பாட் பிக்ஸிங்?: ராஜஸ்தான் வீரர் அதிர்ச்சி தகவல்

Published:

புது தில்லி: கடந்த மாதம் நடைபெற்ற ரஞ்சி போட்டியின் போது தன்னை ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபடுமாறு ஒருவர் தெரிவித்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஒருவர் தகவல் வெளியிட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவலை உறுதிப்படுத்திய பிசிசிஐ செயலர் அனுராக் தாகூர், தனது டிவிட்டர் பதிவில், ஸ்பாட் பிக்ஸ்சிங் தொடர்பாக வீரரிடம் கேட்கப்பட்டுள்ளது. அவர் பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவில் இது குறித்து தகவல் அளித்துவிட்டார். பிசிசிஐயின் கொள்கைகள் சாதகமான விளைவுகளைக் கொடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்தத் தகவலைத் தெரிவித்த மும்பையைச் சேர்ந்த அந்த வீரரின் பெயரை தாகூர் வெளியிடவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பையைச் சேர்ந்த அஜிங்யா ரஹானே, பிரவீண் தாம்பே, தினேஷ் சாலுங்கே, தவால் குல்கர்னி , அபிஷேக் நாயர் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img