சிறார் வதை வீடியோ: 76 இடங்களில் ரெய்டு!

porn vedio 1 1
porn vedio 1 1

இந்தியாவில் சமீபகாலமாக சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

பாலியல் குற்றவாளிகளுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் குற்றங்கள் கொடூரமான முறையில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றது.

இதில் ஒரு சிலர் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது மட்டுமல்லாமல் அதை, படமாக எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் காணொளிகளை எடுப்பது, பார்ப்பது, பகிர்வது என்கிற செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரவுகளை சேகரித்துள்ள சிபிஐ அதிகாரிகள் முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 76 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தினர்.

அந்த வகையில் சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றுவது உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் தமிழகத்திலும் 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

பாலியல் காணொளிகளை காணுவது சமூகத்தில் பெரும்பாலானோர் விருப்பமாக உள்ளது. இதில் வக்கிர எண்ணம் கொண்டோர், மனப்பிறழ்வு காரணமாக குழந்தைகளின் பாலியல் காணொளிகளை காண விரும்புகின்றனர்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

குழந்தைகளை துன்புறுத்தி எடுக்கப்படும் பாலியல் காணொளிகள் உலகம் முழுவதும் பெரிய அளவிலான ஆன்லைன் பொருளீட்டும் வியாபார சந்தையாக உள்ளது.

குழந்தைகள் பாலியல் ஆபாசக் காணொளிகளை பார்ப்பது, தன்னுடைய செல்போனில், லேப்டாப்பில் சேமித்து வைப்பது, அதை ஷேர் செய்வது சட்டப்படி குற்றம். இந்தியாவிலும் இது தடை செய்யப்பட்டுள்ளது.

நாம் ரகசியமாகத்தானே செய்கிறோம் யார் பார்க்கப்போகிறார்கள் என்று பார்ப்பதோ, பரப்புவதோ, சேமிப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பதற்கு என்றே பிரத்யேக டூல்களை பல நாடுகள் உருவாக்கிவிட்டன.

இந்தியாவிலும் அப்படிப்பட்ட பிரத்யேக டூல்கள் மூலம் சம்பந்தப்பட்டவர் ஐபி அட்ரஸை சேகரித்து எளிதாக பிடிக்க முடியும்.

இவ்வாறு குழந்தைகளை பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்துவதை படமெடுத்து இணையதளத்தில் விற்று காசு பார்ப்பவர்கள் உள்ளனர். குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் பதிவுகள் (CSAM) என இதை அழைப்பார்கள்,

இதற்காக குழந்தைகள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதும் நடக்கிறது. இது தவிர கொரோனா காலக்கட்டத்தில் வீட்டில் முடங்கிக்கிடந்த ஆண்களால் இதுபோன்ற தேடல்கள் அதிகரித்து அதுவே வக்கிர எண்ணமாக மாறி அதிக அளவில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளது.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

இது 200% வரை அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. இவ்வாறு செய்பவர்கள் அதை காணொளியாக ஆன்லைனில் பரப்புவதும் நடந்துள்ளது.

இதுபோன்ற குற்றச் செயல்களைத்தடுக்க 2019 ஆம் ஆண்டில், சிபிஐ அதன் சிறப்புக் குற்றப் பகுதியின் ஒரு பகுதியாக OCSAE எனும் ஆன்லைன் குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் தவறான நோக்கோடு பயன்படுத்துதல் தடுப்பு/விசாரணைப் பிரிவை அமைத்தது.

அதன் முக்கியப்பணி குழந்தைகள் பாலியல் வன்கொடுமையை தடுத்தல் மற்றும் அதை காணொளியாக எடுத்து பரப்புவதை தடுத்தல் மேற்கண்ட காரணத்துக்காக குழந்தைகளை கட்டாயப்படுத்தி பயன்படுத்துவதை தடுப்பது ஆகும்.

அவ்வாறு சேகரித்த தரவுகள் அடிப்படையில் ஆன்லைன் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் தவறான செயலுக்காக பயன்படுத்துதல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் மொத்தம் 83 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சிபிஐ நவம்பர் 14 அன்று 23 தனித்தனி வழக்குகளை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்த தரவுகளை நாடெங்கும் சேகரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் முதற்கட்டமாக நாடுமுழுவதும் நேற்று 76 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தினர்.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

இதில் தமிழகத்திலும் திருவள்ளூர், சேலம், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதில் தமிழகத்தில் சேலம், திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் நடத்திய ஆய்வில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories