9 மணி நேர சிபிஐ விசாரணை அன்றைய குஜராத் முதல்வர் மோடியே ஒத்துழைத்தார்: ஹெச்.ராஜா

Published:

h.raja 1 - 2026

மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைத்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பொய்வழக்கில் கைது செய்தது ஐ.மு.கூ அரசு! இவற்றை மறந்துவிட்டு இன்று எதிர்க்கட்சிகள் பேசுவது வெட்கம் கெட்ட செயல் என்று கூறியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

இது குறித்து அவர் பதிவு செய்த டிவிட்டர் பதிவுகளில்…

மோடிஜி முதல்வராக இருந்த போது சிபிஐ அவரை 9 மணி நேரம் விசாரித்தது அவர் முழு ஒத்துழைப்பு தந்தார். அன்றைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷாஜியை பொய் வழக்கில் கைது செய்தது திமுக, காங்கிரஸ் ஐமுகூ அரசு. அன்று இவை அனைத்தையும் செய்த திமுக இன்று கூக்குரலிடுகிறது. வெட்கம் கெட்ட திமுக.

சாரதா சிட்பண்ட் வழக்கு 2014 மே 9 ம் தேதி உச்சநீதிமன்றத்தால் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. அதாவது காங்கிரஸ், திமுக வின் ஐமுகூ ஆட்சியில். இது தெரியாத முட்டாள்கள் மோடிஜி அரசை குறை கூறுவது விந்தையிலும் விந்தை. .. என்று கூறியுள்ளார் ஹெச்.ராஜா.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img