கேஜ்ரிவால், ராகுல் உள்பட 9 பேர் மீது தேச விரோத வழக்குப் பதிவு

ஹைதராபாத்:

தேசவிரோத வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக தெலங்கானா மாநில போலீஸார் தேசவிரோத வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

வழக்குரைஞர் ஜனார்தன் கெளட் தாக்கல் செய்த மனுவில், “ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் மீது, தில்லி போலீஸார் தேசவிரோத வழக்கைப் பதிவு செய்துள்ளனர். இதனை அரவிந்த் கேஜரிவால், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நன்கு அறிந்திருந்தும், அவர்கள் ஜேஎன்யு வளாகத்துக்குள் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களுக்கு ஆதரவளித்துள்ளனர். அவர்களது இந்தச் செயலும் தேசவிரோதமானதாகும்’ என்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக, ஹைதராபாதின் புறநகர்ப் பகுதியான சரூர்நகர் காவல் நிலைய வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது:

ஜேஎன்யு விவகாரம் தொடர்பாக, வழக்குரைஞர் ஜனார்தன் கெளட் என்பவர், ஹைதராபாத் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை வழக்கு ஒன்றைத் தொடுத்தார். அந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஆனந்த் சர்மா, அஜய் மாக்கன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் மீது சனிக்கிழமை, தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா, ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகி, ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், அந்தப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் உமர் காலித் ஆகியோருக்கு எதிராகவும் தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 4-ஆம் தேதி (மார்ச் 4) மீண்டும் விசாரணைக்கு வருகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

Entertainment News

Popular Categories