பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப் படைக்கு பாராட்டுகள்: ராம.கோபாலன்!

ramagopalan2 - 2026

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை அழித்துள்ள இந்திய விமானப்படைக்குப் பாராட்டுகள் என்று கூறியுள்ளார் இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

பத்து நாட்கள் முன்பு காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். இராணுவ வீரர்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடந்தவுடனேயே இஸ்லாமி பயங்கரவாத அமைப்பு, இதனை தாங்கள் தான் நடத்தியது என மார்தட்டி அறிவித்தது. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவன் பாகிஸ்தானில் தான் இருப்பதும், அந்த அமைப்பின் பயிற்சி முகாம்கள் இந்திய எல்லையை ஓட்டி பாகிஸ்தானில் இருப்பதும் உலகறிந்த உண்மை.

இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு, உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தன. உடனடியாக இதற்கு பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்று உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கருத்து கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு இஸ்லாமிய பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தி, அவற்றை அழித்துள்ளது இந்திய விமானப் படை. இதனை அனைவரும் வரவேற்பார்கள். பயங்கரவாதம் வேரும், வேரடி மண்ணும் இல்லாமல் அழிக்க துணிச்சலான நடவடிக்கை தேவை, அதனை தான் இந்திய இராணுவமும் செய்துள்ளது.

நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு விஷயங்களில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்பதை இந்திய அரசு வெளிப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது.

இந்நேரத்தில் பாரத அரசிற்கும், இராணுவத்திற்கும் ஒவ்வொரு தேசபக்தனும் உறுதுணையாக இருந்து, தேச நலனுக்கு அவர்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்போம். இந்திய அரசுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இந்து முன்னணி பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறது.. என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories