பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப் படைக்கு பாராட்டுகள்: ராம.கோபாலன்!

ramagopalan2 - 2026

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை அழித்துள்ள இந்திய விமானப்படைக்குப் பாராட்டுகள் என்று கூறியுள்ளார் இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

பத்து நாட்கள் முன்பு காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். இராணுவ வீரர்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடந்தவுடனேயே இஸ்லாமி பயங்கரவாத அமைப்பு, இதனை தாங்கள் தான் நடத்தியது என மார்தட்டி அறிவித்தது. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவன் பாகிஸ்தானில் தான் இருப்பதும், அந்த அமைப்பின் பயிற்சி முகாம்கள் இந்திய எல்லையை ஓட்டி பாகிஸ்தானில் இருப்பதும் உலகறிந்த உண்மை.

இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு, உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தன. உடனடியாக இதற்கு பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்று உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கருத்து கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு இஸ்லாமிய பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தி, அவற்றை அழித்துள்ளது இந்திய விமானப் படை. இதனை அனைவரும் வரவேற்பார்கள். பயங்கரவாதம் வேரும், வேரடி மண்ணும் இல்லாமல் அழிக்க துணிச்சலான நடவடிக்கை தேவை, அதனை தான் இந்திய இராணுவமும் செய்துள்ளது.

நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு விஷயங்களில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்பதை இந்திய அரசு வெளிப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது.

இந்நேரத்தில் பாரத அரசிற்கும், இராணுவத்திற்கும் ஒவ்வொரு தேசபக்தனும் உறுதுணையாக இருந்து, தேச நலனுக்கு அவர்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்போம். இந்திய அரசுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இந்து முன்னணி பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறது.. என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories