நேருவின் பாரத ரத்னா திரும்ப பெறப்பட வேண்டும்: நேதாஜி உறவினர்கள்

Published:

nehru-subash-bose புது தில்லி: முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, அவருடைய பதவிக் காலத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உறவினர்களை உளவு பார்த்தார் என்று செய்தி வெளியான விவகாரத்தால், அவரது உண்மை ரூபம் வெளிப்பட்டு விட்டதாக நேதாஜி உறவினர்கள் கூறியுள்ளானர். மேலும், நேருவுக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக நேதாஜியின் பேரன் சந்திர போஸ் கூறுகையில், நேதாஜியின் சாதனைகளை அழிக்க நடந்த முயற்சி தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. நேருவைப் பற்றி தற்போது மக்கள் அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். அவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருது திரும்பப் பெறப்பட வேண்டும் என்றார்.

Related articles

Recent articles

spot_img