காத்மண்டு: நேபாளத்தில் இந்திய பக்தர்கள் சென்ற பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர் நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் இருந்து சுமார் 75 கிமீ., தொலைவில் உள்ள தாடிங் மாவட்டத்தில் மலைப்பகுதியில் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளானது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கு இடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. குஜராத் மாநிலத்தில் இருந்து காத்மண்டுவில் உள்ள பசுபதிநாதர் கோவிலுக்கு தரிசனம் செய்ய 45 பக்தர்கள் சென்றனர். அவர்கள் சுவாமி தரிசனம் முடித்து, இந்தியாவின் கோரக்பூரை நோக்கி வந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.

