பீதியைக் கிளப்பிய நிலநடுக்கம்: 7.9 என்கிறது அமெரிக்க நில ஆய்வு மையம்

Published:

nepal-park-horison
நிலநடுக்கத்தால் கடுமையாக சேதமுற்ற பார்க் ஹொரைஸன் அபார்ட்மெண்ட், நேபாளம்
புது தில்லி: இன்று காலை தில்லி மற்றும் நாட்டின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக நேபாளத்தில், கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சாலைகள் பெரும் சேதம் அடைந்தன. அடுக்கு மாடிக் குடியிருப்புகள் பல விரிசல் கண்டன. உடனடியாக குடியிருப்புவாசிகள் வெளியில் வந்து, சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நேபாள் காட்மாண்டுவில் உள்ள பார்க் ஹொரைஸன் அபார்ட்மெண்ட் கடும் சேதமுற்றது. இந்த நிலநடுக்கம் பூமி – தரையின் மிக அருகில், அதாவது 2 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதால், பெரும் பாதிப்புக்கு இடம் இருப்பதாக அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9 மேக்னிட்டூடாக பதிவானது என்று அது தெரிவித்துள்ளது. தில்லி உள்ளிட்ட இந்தியப் பகுதிகள், நேபாளம் மட்டுமல்லாமல் பாகிஸ்தானிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.earh-quake-delhi-nepal

Related articles

Recent articles

spot_img