பாரதப் பிரதமர் நரேந்திர மோதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோதி தமது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்….
தமிழ் சகோதரிகளுக்கும் சகோதரர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வரும் ஆண்டில் உங்கள் ஆசைகள் நிறைவேறட்டும் என்றும் அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெருகட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் தமது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார்.
Dear Tamil sisters and brothers,
Praying for a wonderful year ahead. pic.twitter.com/NXZ3WkXsL0
— Chowkidar Narendra Modi (@narendramodi) April 14, 2019
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது வாழ்த்துச் செய்தியில்…
தமிழகத்தில் உள்ள சகோதர சகோதரிகள் மற்றும் உலகில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
பிறக்கக்கூடிய இந்த வருடம் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் மற்றும் செழிப்பும் வழங்கிட வேண்டிக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நம் தமிழ்நாட்டில் உள்ள சகோதர சகோதரிகள் மற்றும் உலகில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என்னுடைய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பிறக்கக்கூடிய இந்த வருடம் எல்லோர் வாழ்விலும்மகிழ்ச்சியும், இன்பமும் மற்றும் செழிப்பும் வழங்கிட வேண்டிக் கொள்கிறேன்.
— President of India (@rashtrapatibhvn) April 14, 2019