புது தில்லி: அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 2,500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நேபாளத்தில் நடைபெற்றுவரும் மீட்புப் பணிகளில் களத்தில் பணியாற்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தயாராகியுள்ளது. நேபாள அரசுடன் முறைப்படி கலந்தாலோசித்த பின்னர் மீட்புப் பணியில் இறங்கவுள்ளது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. முன்னதாக, நேபாளம் சென்றடைந்த ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹாஸ்போலே அங்குள்ள இந்து ஸ்வயம்சேவக சங்கத்துடன் இணைந்து மீட்புப் பணி திட்டத்தை வடிவமைத்து வருகின்றார். சேத அளவு, மீட்புப் பணி தேவைப்படும் பகுதி என பார்வையிட்டு அதற்கேற்ப இந்தியாவிலிருந்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் நேபாளத்துக்கு அனுப்பப்படவுள்ளனர்.

