பாகிஸ்தானின் நட்புக்காக இந்தியாவின் எச்சரிக்கையை இலங்கை உதாசீனம் செய்ததாம்!

Published:

srilanka suicide - 2026

இந்தியாவின் எச்சரிக்கையை, பாகிஸ்தானின் நல்லுறவு மற்றும் இலங்கையின் இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராக திசை திருப்பி விட இந்தியா வேண்டுமென்றே திட்டமிட்டு இப்படி உளவு சொல்கிறது என்று நினைத்துக் கொண்டது இலங்கை அரசு!

அதனால் வேண்டுமென்றே அசால்டாக இருந்துவிட்டது. பாகிஸ்தானைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம், இலங்கையின் சிறுபான்மை வாக்குகள் போய் விடுமே என்ற கவலை.. இரண்டும் சேர்ந்து கொண்டு, இந்தியாவின் எச்சரிக்கையை உதாசீனப் படுத்த வைத்தது இலங்கையை..

இலங்கையின் மூத்த அதிகாரி ராணுவ செயலர் மற்றும் காவல் தலைவர் ஆகியோர் இப்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து கூறிய போது…

இந்தியா கொழும்புவை இஸ்லாம் மதத்துக்கு எதிராக திசை திருப்பி விட்டு பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தள்ளிவிடுகிறது என்று நினைத்துக் கொண்டது! மேலும் இலங்கையின் சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக அரசை திசை திருப்பும் உத்தி என்று இந்தியாவின் எச்சரிக்கையை இலங்கை கருதியது. அதனால் அசிரத்தையாக இருந்து விட்டது என்று கொழும்புவிலிருந்து வெளியாகும் இதழுக்கு பேட்டியளித்துள்ளார் அந்த அதிகாரி.bombblastsrilanka2 - 2026  கொழும்பு மீது எதிரி மனோபாவத்தை ஏற்படுத்த இந்தியா மேற்கொள்ளும் முயற்சி என்று அதை நினைத்து இருந்ததாம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தில் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தியதில் 253 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், 500க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் தஞ்சம் புகுந்ததும் இலங்கையை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

இலங்கை பாகிஸ்தான் நாட்டுடன் மிக நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளது அப்படி ஒன்றும் ரகசியமானது இல்லை! இரு பத்து ஆண்டுகளாக இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் நெருங்கிய நட்பு உண்டு, இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற போது இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக ஐஎஸ்ஐ மற்றும் பாகிஸ்தான் ராணுவம் உளவு அமைப்பு ஆகியவையும் இணைந்து கை கொடுத்தன.  கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இருந்தபோது மிகவும் நெருக்கமாகவே இருந்தது. புலிகளை  முற்றிலும் ஒழிப்பதற்காக ஐஎஸ்ஐ அமைப்பு பெரும் பங்காற்றியது அனைவருக்கும் தெரியும்.

இலங்கையில் உள்ள சிறுபான்மை சமூகத்திலிருந்து பலரை பணிக்கு எடுத்து இலங்கை இராணுவத்தில் புகுத்தியது ஐஎஸ்ஐ! அதேபோல் பாகிஸ்தான் விமானங்கள் 1971 போரின் போது இலங்கையில் நிறுத்தி எரிபொருள் நிரப்புவதற்கு இடம் கொடுத்ததும் எல்லோருக்கும் தெரியும்

ஸ்ரீலங்கா பாகிஸ்தான் உடனான நட்புறவை இழப்பதற்கு தயாராக இல்லை எனவே இந்தியாவுடனான பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை தங்களுக்குள் இழுத்து விடுவதை இலங்கை விரும்பவில்லை என்று தெரிகிறது! இஸ்லாம் மதத்துக்கு எதிரான இந்தியாவின் எதிர்ப்புத்தன்மையை இலங்கையை தங்களுக்குள் பிரித்துக் கொள்ள விரும்பவில்லை எனவேதான் தற்கொலைப்படை தாக்குதல் குறித்த இந்தியாவின் எச்சரிக்கையை இலங்கை உதாசீனம் செய்தது

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இலங்கை அரசாங்கம் கடந்த சில வருடங்களாகவே இதுபோன்ற மத பயங்கரவாதம் அடிப்படைவாதம் குறித்த தகவல்களால் எச்சரிக்கை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இலங்கையின் அரசியல் தலைமை சமூக பதற்றம் குறித்து ஆசைப்பட்டது இலங்கையின் அரசியல் தலைமை முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்தர்கள் விடுவார்களோ என்ற எச்சரிக்கையை கொண்டிருந்தார்கள்

நாட்டின் இரு வேறு மதங்களுக்கு இடையிலான பிரச்சினை பெரிதாகலாம் என்ற உணர்வுடன் இலங்கை அரசியல் தலைவர்கள் கருதிக்கொண்டு இந்த எச்சரிக்கைகளை புறந்தள்ளினார்கள் ஆனால் இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்தியா வெறுமனே எச்சரிக்கை மட்டும் எடுத்துவிட்டு இருந்துவிடவில்லை எந்த நபர்கள் பெயர் விவரம் முகவரி எங்கே தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள் எத்தகைய தாக்குதலை நடத்த போகிறார்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பட்டியலிட்டு தெள்ளத்தெளிவாக இலங்கைக்கு உளவுத் தகவலை கொடுத்திருந்தது

தெற்காசியாவில் இலங்கை நாடு பாகிஸ்தானின் பாதுகாப்பு துறையின் கூட்டாளியாக இருந்து வருகிறது கடந்த 1999 ஆம் வருடத்திலிருந்து பாகிஸ்தான் நாட்டிடம் இருந்து ராணுவ தளவாடங்கள் கருவிகளை வாங்கியும் வருகிறது டிசம்பர் 2007 வரையிலான காலகட்டத்தில் 50 மில்லியன் டாலர் அளவுக்கு பாகிஸ்தானில் இருந்து இலங்கை ஆயுத தளவாட பொருட்களை வாங்கி இருக்கிறது அது 2009ஆம் வருடம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது ஏப்ரல் 2009 இல் இலங்கை 25 மில்லியன் டாலர் அளவுக்கு ஒரு மாதத்திற்குள்ளாக ஆயுதங்களை பெற்று இருப்பதாக அறியப்படுகிறது!

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img