பாகிஸ்தானின் நட்புக்காக இந்தியாவின் எச்சரிக்கையை இலங்கை உதாசீனம் செய்ததாம்!

srilanka suicide - 2026

இந்தியாவின் எச்சரிக்கையை, பாகிஸ்தானின் நல்லுறவு மற்றும் இலங்கையின் இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராக திசை திருப்பி விட இந்தியா வேண்டுமென்றே திட்டமிட்டு இப்படி உளவு சொல்கிறது என்று நினைத்துக் கொண்டது இலங்கை அரசு!

அதனால் வேண்டுமென்றே அசால்டாக இருந்துவிட்டது. பாகிஸ்தானைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம், இலங்கையின் சிறுபான்மை வாக்குகள் போய் விடுமே என்ற கவலை.. இரண்டும் சேர்ந்து கொண்டு, இந்தியாவின் எச்சரிக்கையை உதாசீனப் படுத்த வைத்தது இலங்கையை..

இலங்கையின் மூத்த அதிகாரி ராணுவ செயலர் மற்றும் காவல் தலைவர் ஆகியோர் இப்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து கூறிய போது…

இந்தியா கொழும்புவை இஸ்லாம் மதத்துக்கு எதிராக திசை திருப்பி விட்டு பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தள்ளிவிடுகிறது என்று நினைத்துக் கொண்டது! மேலும் இலங்கையின் சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக அரசை திசை திருப்பும் உத்தி என்று இந்தியாவின் எச்சரிக்கையை இலங்கை கருதியது. அதனால் அசிரத்தையாக இருந்து விட்டது என்று கொழும்புவிலிருந்து வெளியாகும் இதழுக்கு பேட்டியளித்துள்ளார் அந்த அதிகாரி.bombblastsrilanka2 - 2026  கொழும்பு மீது எதிரி மனோபாவத்தை ஏற்படுத்த இந்தியா மேற்கொள்ளும் முயற்சி என்று அதை நினைத்து இருந்ததாம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தில் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தியதில் 253 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், 500க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் தஞ்சம் புகுந்ததும் இலங்கையை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது

இலங்கை பாகிஸ்தான் நாட்டுடன் மிக நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளது அப்படி ஒன்றும் ரகசியமானது இல்லை! இரு பத்து ஆண்டுகளாக இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் நெருங்கிய நட்பு உண்டு, இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற போது இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக ஐஎஸ்ஐ மற்றும் பாகிஸ்தான் ராணுவம் உளவு அமைப்பு ஆகியவையும் இணைந்து கை கொடுத்தன.  கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இருந்தபோது மிகவும் நெருக்கமாகவே இருந்தது. புலிகளை  முற்றிலும் ஒழிப்பதற்காக ஐஎஸ்ஐ அமைப்பு பெரும் பங்காற்றியது அனைவருக்கும் தெரியும்.

இலங்கையில் உள்ள சிறுபான்மை சமூகத்திலிருந்து பலரை பணிக்கு எடுத்து இலங்கை இராணுவத்தில் புகுத்தியது ஐஎஸ்ஐ! அதேபோல் பாகிஸ்தான் விமானங்கள் 1971 போரின் போது இலங்கையில் நிறுத்தி எரிபொருள் நிரப்புவதற்கு இடம் கொடுத்ததும் எல்லோருக்கும் தெரியும்

ஸ்ரீலங்கா பாகிஸ்தான் உடனான நட்புறவை இழப்பதற்கு தயாராக இல்லை எனவே இந்தியாவுடனான பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை தங்களுக்குள் இழுத்து விடுவதை இலங்கை விரும்பவில்லை என்று தெரிகிறது! இஸ்லாம் மதத்துக்கு எதிரான இந்தியாவின் எதிர்ப்புத்தன்மையை இலங்கையை தங்களுக்குள் பிரித்துக் கொள்ள விரும்பவில்லை எனவேதான் தற்கொலைப்படை தாக்குதல் குறித்த இந்தியாவின் எச்சரிக்கையை இலங்கை உதாசீனம் செய்தது

இலங்கை அரசாங்கம் கடந்த சில வருடங்களாகவே இதுபோன்ற மத பயங்கரவாதம் அடிப்படைவாதம் குறித்த தகவல்களால் எச்சரிக்கை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இலங்கையின் அரசியல் தலைமை சமூக பதற்றம் குறித்து ஆசைப்பட்டது இலங்கையின் அரசியல் தலைமை முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்தர்கள் விடுவார்களோ என்ற எச்சரிக்கையை கொண்டிருந்தார்கள்

நாட்டின் இரு வேறு மதங்களுக்கு இடையிலான பிரச்சினை பெரிதாகலாம் என்ற உணர்வுடன் இலங்கை அரசியல் தலைவர்கள் கருதிக்கொண்டு இந்த எச்சரிக்கைகளை புறந்தள்ளினார்கள் ஆனால் இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்தியா வெறுமனே எச்சரிக்கை மட்டும் எடுத்துவிட்டு இருந்துவிடவில்லை எந்த நபர்கள் பெயர் விவரம் முகவரி எங்கே தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள் எத்தகைய தாக்குதலை நடத்த போகிறார்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பட்டியலிட்டு தெள்ளத்தெளிவாக இலங்கைக்கு உளவுத் தகவலை கொடுத்திருந்தது

தெற்காசியாவில் இலங்கை நாடு பாகிஸ்தானின் பாதுகாப்பு துறையின் கூட்டாளியாக இருந்து வருகிறது கடந்த 1999 ஆம் வருடத்திலிருந்து பாகிஸ்தான் நாட்டிடம் இருந்து ராணுவ தளவாடங்கள் கருவிகளை வாங்கியும் வருகிறது டிசம்பர் 2007 வரையிலான காலகட்டத்தில் 50 மில்லியன் டாலர் அளவுக்கு பாகிஸ்தானில் இருந்து இலங்கை ஆயுத தளவாட பொருட்களை வாங்கி இருக்கிறது அது 2009ஆம் வருடம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது ஏப்ரல் 2009 இல் இலங்கை 25 மில்லியன் டாலர் அளவுக்கு ஒரு மாதத்திற்குள்ளாக ஆயுதங்களை பெற்று இருப்பதாக அறியப்படுகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories