மௌலானா மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா.,!

masood azhar - 2026

புல்வாமா தாக்குதலின் பின்னணியில் செயல்பட்ட பாகிஸ்தானில் இருந்து இயங்கும் இஸ்லாமிய பயங்கரவாதி மௌலானா மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்! சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் அவரது பெயரும் இணைந்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத், இந்திய பாதுகாப்புப் படையினர் மீது நடத்திய மனிதத் தன்மையற்ற காட்டுமிராண்டித் தனமான தாக்குதல், உலகம் முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும், இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்பை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டது.

இருப்பினும், பாகிஸ்தானுடன் சீனாவுக்கு உள்ள உறவுகளின் அடிப்படையில், சீன அரசு எதிர்ப்பு தெரிவித்ததின் காரணமாக இந்தியாவின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டது. ஆயினும், தொடர்ந்து சீனாவுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

முன்னதாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை இந்தியாவின் கோரிக்கையை ஏற்றதுடன், சீனாவும் அதே நிலையை எடுக்கவேண்டும் என்று வற்புறுத்தின. இதனால் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இணைக்க சீனாவும் ஒப்புக் கொண்டது. இதை அடுத்து ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்து இன்று அறிவிப்பு வெளியிட்டது.

இதன் மூலம் சர்வதேச அளவில் மசூத் அசாரின் ஜெய்ஷ் இ மொஹம்மத் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மௌலானா மசூத் அசார் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவது, பாகிஸ்தானில் இருந்து இயக்கத்தை நடத்துவது உள்ளிட்ட செயல்கள் தடுக்கப் பட்டுள்ளன. இந்நிலையில், மௌலானா மசூத் அசாரை பாகிஸ்தான் அரசு கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மௌலானா மசூத் அசாா் பிற நாடுகளுக்கு செல்ல முயற்சி செய்யும் பட்சத்தில் அவருக்கு நெருக்கடி ஏற்படும். அசாா் சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பொிய வெற்றி என்று கூறப் படுகிறது.

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

இது குறித்து சையத் அக்பருத்தீன் தனது டிவிட்டர் பதிவில், இந்த நடவடிக்கையை வரவேற்பதாகவும், இதற்காக ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றும் பயங்கரவாதத்தின் மீது பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற ஹாஷ்டாக்குடனும் கருத்து வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories