December 5, 2025, 6:37 PM
26.7 C
Chennai

மௌலானா மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா.,!

masood azhar - 2025

புல்வாமா தாக்குதலின் பின்னணியில் செயல்பட்ட பாகிஸ்தானில் இருந்து இயங்கும் இஸ்லாமிய பயங்கரவாதி மௌலானா மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்! சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் அவரது பெயரும் இணைந்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத், இந்திய பாதுகாப்புப் படையினர் மீது நடத்திய மனிதத் தன்மையற்ற காட்டுமிராண்டித் தனமான தாக்குதல், உலகம் முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும், இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்பை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டது.

இருப்பினும், பாகிஸ்தானுடன் சீனாவுக்கு உள்ள உறவுகளின் அடிப்படையில், சீன அரசு எதிர்ப்பு தெரிவித்ததின் காரணமாக இந்தியாவின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டது. ஆயினும், தொடர்ந்து சீனாவுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

முன்னதாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை இந்தியாவின் கோரிக்கையை ஏற்றதுடன், சீனாவும் அதே நிலையை எடுக்கவேண்டும் என்று வற்புறுத்தின. இதனால் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இணைக்க சீனாவும் ஒப்புக் கொண்டது. இதை அடுத்து ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்து இன்று அறிவிப்பு வெளியிட்டது.

இதன் மூலம் சர்வதேச அளவில் மசூத் அசாரின் ஜெய்ஷ் இ மொஹம்மத் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மௌலானா மசூத் அசார் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவது, பாகிஸ்தானில் இருந்து இயக்கத்தை நடத்துவது உள்ளிட்ட செயல்கள் தடுக்கப் பட்டுள்ளன. இந்நிலையில், மௌலானா மசூத் அசாரை பாகிஸ்தான் அரசு கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மௌலானா மசூத் அசாா் பிற நாடுகளுக்கு செல்ல முயற்சி செய்யும் பட்சத்தில் அவருக்கு நெருக்கடி ஏற்படும். அசாா் சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பொிய வெற்றி என்று கூறப் படுகிறது.

இது குறித்து சையத் அக்பருத்தீன் தனது டிவிட்டர் பதிவில், இந்த நடவடிக்கையை வரவேற்பதாகவும், இதற்காக ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றும் பயங்கரவாதத்தின் மீது பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற ஹாஷ்டாக்குடனும் கருத்து வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories