கேரளத்தில் பட்டினி சாவைத் தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?: உம்மன் சாண்டிக்கு கேரள பாஜக கேள்வி

திருவனந்தபுரம்:

பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் நாகரிகம் குறித்துக் கேள்வி எழுப்பிய கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு அந்த மாநில பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

அண்மையில் கேரளத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, கேரள பழங்குடி இனத்தவர் முன்னேற்றம் குறித்து பேசியபோது, சோமாலியா நாட்டுடன் ஒப்பிட்டுப் பேசினார். இதனைக் கண்டித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி, மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், கேரளத்தை சோமாலியாவுடன் ஒப்பிட்டுப் பேசியது மாநிலத்தை அவமதிக்கும் செயல் என்றும், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் என அனைத்துத் துறைகளிலும் தேசிய சராசரியைவிட கேரளம் உயர்வாகவே உள்ளது என்றும் சாண்டி சுட்டிக்காட்டியிருந்தார். மேலும், கேரளம் குறித்த தவறான கருத்தைத் திரும்பப் பெறுவதன் மூலம் அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சாண்டி வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் கேரள மாநில பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் திருவனந்தபுரத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் இது தொடர்பாகக் கூறியதாவது:
அண்மையில் கண்ணூர் மாவட்ட மலைவாழ் மக்கள் காலனியில் இரு சிறார்கள் குப்பைத் தொட்டியில் இருந்து உணவைத் தேடிய செய்தி வெளியாகி, தேசத்தின் மனசாட்சியையே உலுக்கியது. இதுபோன்ற சூழ்நிலையில் கேரளத்தில் பிரதமர் மோடி பேசிய விஷயங்கள் தவறானவை அல்ல.

கேரளத்தில் அரசு சரியாக செயல்பட்டிருந்தால், இரு சிறார்கள் உணவுக்காக குப்பைத் தொட்டியைத் தேட வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்காது. அட்டப்பாடியில் 143 சிறார்கள் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளனர். இவற்றையெல்லாம் முதல்வர் உம்மன் சாண்டி மறந்துவிட்டார்.

மாநிலத்தில் பட்டினிச் சாவைச் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பதை அவர் முதலில் விளக்க வேண்டும். மாநிலத்தைப் பற்றி சாண்டி கூறும் புள்ளி விவரங்களுக்கும் உண்மை நிலவரத்துக்கும் இடையே அதிர்ச்சியளிக்கத்தக்க வேறுபாடுகள் உள்ளன என்றார் ராஜசேகரன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories