கேரளத்தில் பட்டினி சாவைத் தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?: உம்மன் சாண்டிக்கு கேரள பாஜக கேள்வி

திருவனந்தபுரம்:

பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் நாகரிகம் குறித்துக் கேள்வி எழுப்பிய கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு அந்த மாநில பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

அண்மையில் கேரளத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, கேரள பழங்குடி இனத்தவர் முன்னேற்றம் குறித்து பேசியபோது, சோமாலியா நாட்டுடன் ஒப்பிட்டுப் பேசினார். இதனைக் கண்டித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி, மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், கேரளத்தை சோமாலியாவுடன் ஒப்பிட்டுப் பேசியது மாநிலத்தை அவமதிக்கும் செயல் என்றும், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் என அனைத்துத் துறைகளிலும் தேசிய சராசரியைவிட கேரளம் உயர்வாகவே உள்ளது என்றும் சாண்டி சுட்டிக்காட்டியிருந்தார். மேலும், கேரளம் குறித்த தவறான கருத்தைத் திரும்பப் பெறுவதன் மூலம் அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சாண்டி வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் கேரள மாநில பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் திருவனந்தபுரத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் இது தொடர்பாகக் கூறியதாவது:
அண்மையில் கண்ணூர் மாவட்ட மலைவாழ் மக்கள் காலனியில் இரு சிறார்கள் குப்பைத் தொட்டியில் இருந்து உணவைத் தேடிய செய்தி வெளியாகி, தேசத்தின் மனசாட்சியையே உலுக்கியது. இதுபோன்ற சூழ்நிலையில் கேரளத்தில் பிரதமர் மோடி பேசிய விஷயங்கள் தவறானவை அல்ல.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

கேரளத்தில் அரசு சரியாக செயல்பட்டிருந்தால், இரு சிறார்கள் உணவுக்காக குப்பைத் தொட்டியைத் தேட வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்காது. அட்டப்பாடியில் 143 சிறார்கள் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளனர். இவற்றையெல்லாம் முதல்வர் உம்மன் சாண்டி மறந்துவிட்டார்.

மாநிலத்தில் பட்டினிச் சாவைச் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பதை அவர் முதலில் விளக்க வேண்டும். மாநிலத்தைப் பற்றி சாண்டி கூறும் புள்ளி விவரங்களுக்கும் உண்மை நிலவரத்துக்கும் இடையே அதிர்ச்சியளிக்கத்தக்க வேறுபாடுகள் உள்ளன என்றார் ராஜசேகரன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories