February 23, 2026, 9:53 PM
27.2 C
Chennai

அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார்… ஆனால் என்னால் மன்னிக்கவே முடியாது! பிரக்யா தாக்குர் விவகாரத்தில் மோடி!

modi pragya takkur - 2026

போபால்: கோட்சேவை தேசபக்தர் எனக் கூறி பின்னர் அதற்காக அவர் வருத்தமும் மன்னிப்பும் கேட்ட போதிலும், சாத்வி பிரக்யா தாகூரை என்னால் மன்னிக்கவே முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பிரக்யா சிங் தாக்குர் மன்னிப்பு கேட்டுள்ள போதிலும் என்னால் அவரை மன்னிக்கவே முடியாது என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.

மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதி பாஜக., வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர், கமல்ஹாசன் கோட்சே ஒரு ஹிந்து தீவிரவாதி என்று குறிப்பிட்டு சர்ச்சையைக் கிளப்பிய பின்னர், நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அவர் தேச பக்தராகவே இருப்பார். அவரை தீவிரவாதி எனக் கூறுபவர்கள் தங்களைத் தாங்களே உற்றுநோக்க வேண்டும். இதுபோன்ற கருத்துக்களை கூறுபவர்களுக்கு மக்கள் இந்த தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், பிரக்யா சிங் தாக்குரின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. எதிர்க்கட்சிகள் பிரக்யா சிங் தாக்குரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இதனால், பாஜக.,வும் பிரக்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. தற்போது பிரதமர் நரேந்திர மோடியும் பிரக்ய சிங் தாக்குருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மேலும் இருவர் கூறிய கருத்துகள் சர்ச்சை ஆகின. இதை அடுத்து பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா இவர்களின் கருத்துகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர், அனந்த் குமார் ஹெட்ஜே, பிரக்யா சிங் தாகூர், நிதின் கடேல் ஆகியோர் பேசியதெல்லாம் அவர்களின் சொந்தக் கருத்துகள். அவை பாஜக.,வின் அதிகாரபூர்வ கருத்துகள் அல்ல. பாஜக,.,வுக்கும் அவர்களின் கருத்துகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை! என்று கூறினார்.

இதனால், இம்மூவரும் தாங்கள் தெரிவித்த கருத்துகளை திரும்பப் பெற்றதுடன் அதற்காக தாங்கள் வருந்துவதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும் கூறினர். இது குறித்து கருத்து தெரிவித்த அமித்ஷா, இம்மூவரின் கருத்துகள் குறித்து விசாரிக்க கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பப் பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

Topics

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories