ராக்கெட் ஏவுறத நேர்ல பாக்கணுமா?! ஆன்லைன்ல முன்பதிவு செய்யுங்க…!

Published:

isro gslv gsat 6a - 2026

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 22ம் தேதி ஏவப்பட இருக்கும் பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் ஏவுதலை பொதுமக்களும் நேரில் காண, முன்பதிவு தொடங்கப் பட்டுள்ளது.

ரிசாட் 2-பி செயற்கைக்கோளைத் தாங்கி பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து வரும் மே 22ஆம் தேதி காலை 5.27க்கு இந்த ராக்கெட் ஏவப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கவுட்ன் டவுன் வரும் மே 21ஆம் தேதியன்று தொடங்கும்.

விண்வெளிக்கு ராக்கெட் ஏவப் படுவதை ஊடகத்தினர், முக்கியப் பிரமுகர்கள், விஞ்ஞானிகள் என குறிப்பிட்ட சிலரே நேரில் பார்க்க அனுமதிக்கப் பட்டு வந்தனர். இந்நிலையில், பொதுமக்களும் இவற்றை நேரடியாகக் காணும் வகையில் அண்மையில் திறந்தவெளி அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு அனுமதி வழங்கப் பட்டு வருகிறது.

சுமார் ஐந்தாயிரம் பேர் அமரும் வசதி கொண்ட அந்த அரங்கில் இருந்து ரிசாட்-2பி செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்படுவதைப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

அதற்கு www.shar.gov.in இணையதளத்தில் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img