முடிவு வரும் முன்பே தோல்விக்குப் பொறுப்பேற்ற ராகுல் காந்தி!

rahul gandhi 24 - 2026

மக்களவைத் தேர்தலில் எண்ணப் பட்ட வாக்குகளின் அடிப்படையில் பாஜக., பெரும்பான்மை பெற்றுள்ளது. தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் தோல்விக்கு தாம் பொறுப்பேற்பதாக கூறினார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, `மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களின் முடிவுக்கு நான் சாயம் பூச விரும்பவில்லை. மக்கள் முடிவுக்கு தலை வணங்குகிறேன். மக்கள் அவர்களின் தெளிவான முடிவுகளை கொடுத்துள்ளனர்.

அமேதியில் வெற்றி பெற்றுள்ள ஸ்மிரிதி இரானிக்கும், மோடிக்கும், பாஜக.,வுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்… என்று கூறினார்.

ராகுல் இவ்வாறு கூறிய போது, அமேதி தொகுதியின் முடிவு அறிவிக்கப் படவில்லை. முன்னிலை நிலவரம் தான் வெளியாகியிருந்தது. மேலும் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் எண்ணப் பட வேண்டிய நிலையில், முன்னதாகவே தாமே தோல்வியை ஒப்புக் கொண்டார் ராகுல். மேலும் முறையாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் முன், தாம் தோற்றதாக ராகுல் கூறியதற்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டன.

இந்த செய்தியாளர் சந்திப்பில் மேலும் பேசிய ராகுல், காங்கிரஸின் இந்த தோல்விக்கு முழுவதுமாக பொறுப்பேற்றுக் கொள்கிறேன். காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிப்பதா அல்லது ராஜினாமா செய்வதா என்பதை காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்யும்.

என்னை நோக்கி எத்தனை விமர்சனங்கள், வேறுபாடுகள், அவதூறுகள் எழுப்பப்பட்டாலும் நான் அவற்றை உண்மையான அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். தொடர்ந்து அன்பு செலுத்துவேன். எங்கே தவறு செய்தோம் என்பது குறித்து விவாதம் செய்ய இது நேரமல்ல! என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Topics

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Entertainment News

Popular Categories