December 6, 2025, 2:32 AM
26 C
Chennai

முடிவு வரும் முன்பே தோல்விக்குப் பொறுப்பேற்ற ராகுல் காந்தி!

rahul gandhi 24 - 2025

மக்களவைத் தேர்தலில் எண்ணப் பட்ட வாக்குகளின் அடிப்படையில் பாஜக., பெரும்பான்மை பெற்றுள்ளது. தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் தோல்விக்கு தாம் பொறுப்பேற்பதாக கூறினார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, `மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களின் முடிவுக்கு நான் சாயம் பூச விரும்பவில்லை. மக்கள் முடிவுக்கு தலை வணங்குகிறேன். மக்கள் அவர்களின் தெளிவான முடிவுகளை கொடுத்துள்ளனர்.

அமேதியில் வெற்றி பெற்றுள்ள ஸ்மிரிதி இரானிக்கும், மோடிக்கும், பாஜக.,வுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்… என்று கூறினார்.

ராகுல் இவ்வாறு கூறிய போது, அமேதி தொகுதியின் முடிவு அறிவிக்கப் படவில்லை. முன்னிலை நிலவரம் தான் வெளியாகியிருந்தது. மேலும் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் எண்ணப் பட வேண்டிய நிலையில், முன்னதாகவே தாமே தோல்வியை ஒப்புக் கொண்டார் ராகுல். மேலும் முறையாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் முன், தாம் தோற்றதாக ராகுல் கூறியதற்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டன.

இந்த செய்தியாளர் சந்திப்பில் மேலும் பேசிய ராகுல், காங்கிரஸின் இந்த தோல்விக்கு முழுவதுமாக பொறுப்பேற்றுக் கொள்கிறேன். காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிப்பதா அல்லது ராஜினாமா செய்வதா என்பதை காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்யும்.

என்னை நோக்கி எத்தனை விமர்சனங்கள், வேறுபாடுகள், அவதூறுகள் எழுப்பப்பட்டாலும் நான் அவற்றை உண்மையான அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். தொடர்ந்து அன்பு செலுத்துவேன். எங்கே தவறு செய்தோம் என்பது குறித்து விவாதம் செய்ய இது நேரமல்ல! என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories