December 6, 2025, 5:42 AM
24.9 C
Chennai

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட இரு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மூன்றாவது மனைவியுடன் குடும்பம் நடத்தியவர் கைது!

therumanam 3 - 2025
இரண்டு மனைவிகளை ஏமாற்றி 8 வருடங்களாக குடும்பம் நடத்தி,  மூன்றாவது மனைவியுடன் இருந்து வந்த  வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராகுல் சோம்லா என்பவர் கடந்த 1994ம் ஆண்டு, பத்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் ரூ.50 லட்சம் வரதட்சணையாகவும், தொழில் துவங்க பணம் தேவை எனக்கூறி ரூ.37 லட்சமும் வாங்கியுள்ளார். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த 2011ம் தனக்கு திருமணம் முடிந்து விவாகரத்து ஆகிவிட்டது என கூறி ஹேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

wedding 1 1 - 2025

இந்த திருமணம் குறித்த தகவல் முதல் மனைவிக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டார்.

மேலும் இரண்டாவது மனைவி ஹேமாவிடமும் பல்வேறு காரணங்களை கூறி ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகைகளை பெற்று அடகு வைத்துள்ளார்.

இவ்வளவு பணத்தையும் கணவர் என்ன செய்தார் என்பது குறித்து இரண்டு மனைவிகளுமே கேட்காமல் இருந்துள்ளனர்.

இருவருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில், வாரத்தில் முதல் மனைவியுடன் மூன்று நாள், இரண்டாவது மனைவியுடன் நான்கு நாட்கள் என வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் கிரிக்கெட் வீரர் ஒருவரின் திருமண விழாவிற்கு தன்னுடைய இரண்டு மனைவிகளுடனும் ராகுல் சோம்லா சென்றுள்ளார்.

நிகழ்ச்சியில் இருவரையும் ஒருவருக்கொருவர் அறியாத வகையில் பங்கேற்க வைத்துள்ளார்.

wedding 2 1 - 2025

அந்த சமயத்தில் தன்னுடைய கணவர் வேறு ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த முதல் மனைவி, கணவனுடன் சண்டையிட ஆரம்பித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் போலீசார் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் கணவரின் நடத்தையில் சந்தேகமடைந்த இரண்டாவது மனைவி, ராகுல் சோம்லாவின் பித்தலாட்டத்தை கண்டுபிடித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதில் தன்னுடைய கணவர் மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதாக குற்றம்சாட்டி வருகிறாா்.

இந்த வழக்கானது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராகுல் சோம்லா மீது ஏற்கனவே ஒரு வழக்கு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories