தமிழகம் முழுவதும் 28 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் நியமனம்; டி.ஜி.பி.டிகே.ராஜேந்திரன் உத்தரவு…..!

DGP 2 - 2026

தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 28 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 28 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்த போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், மேலும் 13 பேர் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக தமிழக போலீசில் ஏற்கனவே தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. தலைமையில் இந்த பிரிவு தற்போது செயல்பட்டு வருகிறது.

இந்த பிரிவில் 3 போலீஸ் சூப்பிரண்டுகள் பதவி வகிக்கிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விரைவாக விசாரித்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்காக இந்த தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த தனிப்பிரிவில் தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், நகரங்களிலுமாக 41 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் கூடுதல் துணை கமிஷனர்கள் புதியதாக பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

இதில் 28 பேர் தற்போது பணிநியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதற்கான உத்தரவை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் நேற்றிரவு பிறப்பித்தார்.

இந்த 28 பேரும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பணியாற்றியவர்கள் ஆவர். இதன் மூலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் இனிமேல் கூடுதல் சூப்பிரண்டு மற்றும் கூடுதல் துணை கமிஷனர்கள் பதவிகள் இருக்காது.

மீதமுள்ள 13 இடங்களுக்கு விரைவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் நியமிக்கப்படுவார்கள் என்று டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories