December 6, 2025, 7:08 AM
23.8 C
Chennai

தமிழகம் முழுவதும் 28 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் நியமனம்; டி.ஜி.பி.டிகே.ராஜேந்திரன் உத்தரவு…..!

DGP 2 - 2025

தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 28 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 28 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்த போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், மேலும் 13 பேர் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக தமிழக போலீசில் ஏற்கனவே தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. தலைமையில் இந்த பிரிவு தற்போது செயல்பட்டு வருகிறது.

இந்த பிரிவில் 3 போலீஸ் சூப்பிரண்டுகள் பதவி வகிக்கிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விரைவாக விசாரித்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்காக இந்த தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த தனிப்பிரிவில் தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், நகரங்களிலுமாக 41 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் கூடுதல் துணை கமிஷனர்கள் புதியதாக பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.

இதில் 28 பேர் தற்போது பணிநியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதற்கான உத்தரவை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் நேற்றிரவு பிறப்பித்தார்.

இந்த 28 பேரும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பணியாற்றியவர்கள் ஆவர். இதன் மூலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் இனிமேல் கூடுதல் சூப்பிரண்டு மற்றும் கூடுதல் துணை கமிஷனர்கள் பதவிகள் இருக்காது.

மீதமுள்ள 13 இடங்களுக்கு விரைவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் நியமிக்கப்படுவார்கள் என்று டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories