2வயது மகனை தனியே விட்டு வரமுடியாது; போலீஸ் வீட்டுக்கு வந்து கைது செய்ய கெஞ்சிய கொலைகாரன்…..!

marder - 2026

தனது சகோதரி மகன் திருமணத்துக்கு வர மறுத்த மனைவியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கணவர் கொலை செய்தார். பின்னர் அவர் போலீசாரை வீட்டுக்கு வரவழைத்து சரண் அடைந்துள்ளார்.

தானே மாவட்டம் அம்பர்நாத் பகுதியை சேர்ந்தவர் தீபக் சுக்லால் (வயது 41). இவரது மனைவி ரூபாலி (40). இவர்களுக்கு 9 வயதில் மகளும், 2 வயதில் மகனும் உள்ளனர். கணவர், மனைவி இருவருக்கும் இடையே சிறு பிரச்சினைகளுக்கு கூட அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் தீபக் சுக்லால் மற்றும் மனைவி ரூபாலி வீட்டில் இருந்தனர். மகள் பள்ளிக்கு சென்றுவிட்டாள். மகன் வீட்டின் மற்றொரு அறையில் தூங்கி கொண்டு இருந்தான்.

அப்போது கணவர் தீபக் சுக்லால், ஜல்காவில் நடைபெறும் தனது சகோதரி மகனின் திருமணத்திற்கு மனைவியை அழைத்துள்ளார். ஆனால் ரூபாலி திருமணத்திற்கு வர மறுத்தார். இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

கழுத்தை நெரித்து கொன்றார்

அப்போது ஆத்திரமடைந்த தீபக் சுக்லால் மனைவியை அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

பின்னர் அவர் சிவாஜி நகர் போலீசாருக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை அழுதுகொண்டே தெரிவித்தார்.

தனது 2 வயது மகன் தூங்கி கொண்டு இருப்பதால் அவனை தனிமையில் விட்டு விட்டு போலீஸ் நிலையத்துக்கு வந்து சரண் அடைய இயலாது என தெரிவித்தார்.

தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் ரூபாலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரிடம் தீபக் சுக்லால் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீபக் சுக்லாலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தைகளை அவர்களது மாமா வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories